NILGIRIS

Nilgiri Mountain Railway: ஃபெஞ்சல் புயல் எதிரொலி... நாளை முதல் 3 நாளுக்கு மலை ரயில் சேவை ரத்து...

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... நாளை முதல் 3 நாளுக்கு மலை ரயில் சேவை ரத்து... ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களும் கனமழையில் சிக்கித் தவிக்கிறது. அதிக அளவில் காற்றுடன் பெய்த அதி கனமழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் பார்க்க முடிகிறது. ஃபெஞ்சல் புயல் இன்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தருமபுரி வழியாக நகர்கிறது. இதனால் மலை மாவட்டமான ஊட்டியில் நாளை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்யப் பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் மலை மாவட்டத்திற்கு வருகை புரியும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மழையின் தாக்கம் சற்று குறையும் வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையும் படிங்க: PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் பாதுகாப்பு கருதி இவ்வாறான முடிவுகளை எடுப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது ரயில்வே நிர்வாகம். ரயில் பயணம் மேற்கொள்ள எதிர்பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருப்பது நல்ல முடிவு என ஒரு சாரார் வரவேற்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / Nilgiri Mountain Railway: ஃபெஞ்சல் புயல் எதிரொலி... நாளை முதல் 3 நாளுக்கு மலை ரயில் சேவை ரத்து... Nilgiri Mountain Railway: ஃபெஞ்சல் புயல் எதிரொலி... நாளை முதல் 3 நாளுக்கு மலை ரயில் சேவை ரத்து... ஃபெஞ்சல் புயல் எதிரொலி... நாளை முதல் 3 நாளுக்கு மலை ரயில் சேவை ரத்து... Nilgiri Mountain Railway: கனமழையின் காரணமாக 3 நாட்கள் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 1, 2024, 9:45 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களும் கனமழையில் சிக்கித் தவிக்கிறது. அதிக அளவில் காற்றுடன் பெய்த அதி கனமழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் பார்க்க முடிகிறது. ஃபெஞ்சல் புயல் இன்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தருமபுரி வழியாக நகர்கிறது. இதனால் மலை மாவட்டமான ஊட்டியில் நாளை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. விளம்பரம் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்யப் பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் மலை மாவட்டத்திற்கு வருகை புரியும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மழையின் தாக்கம் சற்று குறையும் வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையும் படிங்க: PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் பாதுகாப்பு கருதி இவ்வாறான முடிவுகளை எடுப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது ரயில்வே நிர்வாகம். ரயில் பயணம் மேற்கொள்ள எதிர்பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருப்பது நல்ல முடிவு என ஒரு சாரார் வரவேற்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Train First Published : December 1, 2024, 9:45 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.