TAMIL-NADU

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... இன்டர்போல் உதவியை நாடியது தமிழ்நாடு போலீஸ்!

கொடநாடு வழக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாக உதகை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி காவல்துறையினரும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகானும் ஆஜராகினர். அதேபோல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணையை எப்போது முடித்து, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வருவீர்கள்? என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, விரைவில் புலன் விசாரணையை முடித்த பிறகு, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வந்துவிடுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதாகவும், அதுகுறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்ககூடாது என தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி! குற்றம்சாட்டபட்டவர்களில் 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளதாகவும், எனவே கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... இன்டர்போல் உதவியை நாடியது தமிழ்நாடு போலீஸ்! கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... இன்டர்போல் உதவியை நாடியது தமிழ்நாடு போலீஸ்! கொடநாடு வழக்கு விரைவில் புலன் விசாரணையை முடித்த பிறகு, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வந்துவிடுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Udhagamandalam,The Nilgiris,Tamil Nadu Last Updated : July 26, 2024, 7:35 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாக உதகை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி காவல்துறையினரும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகானும் ஆஜராகினர். அதேபோல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணையை எப்போது முடித்து, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வருவீர்கள்? என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். விளம்பரம் அதற்கு, விரைவில் புலன் விசாரணையை முடித்த பிறகு, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வந்துவிடுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதாகவும், அதுகுறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்ககூடாது என தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி! குற்றம்சாட்டபட்டவர்களில் 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளதாகவும், எனவே கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kodanadu estate , Tamilnadu First Published : July 26, 2024, 7:35 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.