முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரண்டாவது நாளாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக காலத்தை வென்ற கந்தன் பாடல்கள் என்ற தலைப்பில், பின்னணி பாடகர் வேல்முருகன், பாடல்கள் பாடி பக்தர்களை பரவசமூட்டினார். மாநாட்டில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை எப்படி மக்களை ஆற்றுப்படுத்துகிறதோ, அதேபோல, பல லட்சம் முருக பக்தர்களை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆற்றுப்படுத்துவதாக தெரிவித்தார். மத விழாக்களை அரசு நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார். Also Read : மூத்த நடிகர்கள் பல்லு போயும் நடிக்கிறாங்க - ரஜினிக்கு துரைமுருகன் பதில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். மாநாட்டில் பேசிய திருவாவடுதுறை ஆதீனம், அனைவரும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் எனவும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவாக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள 143 முருகன் கோயில்களை தேர்வு செய்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் - அமைச்சர் உதயநிதி முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் - அமைச்சர் உதயநிதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 26, 2024, 6:55 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரண்டாவது நாளாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக காலத்தை வென்ற கந்தன் பாடல்கள் என்ற தலைப்பில், பின்னணி பாடகர் வேல்முருகன், பாடல்கள் பாடி பக்தர்களை பரவசமூட்டினார். மாநாட்டில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை எப்படி மக்களை ஆற்றுப்படுத்துகிறதோ, அதேபோல, பல லட்சம் முருக பக்தர்களை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆற்றுப்படுத்துவதாக தெரிவித்தார். மத விழாக்களை அரசு நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார். விளம்பரம் Also Read : மூத்த நடிகர்கள் பல்லு போயும் நடிக்கிறாங்க - ரஜினிக்கு துரைமுருகன் பதில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். மாநாட்டில் பேசிய திருவாவடுதுறை ஆதீனம், அனைவரும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் எனவும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவாக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள 143 முருகன் கோயில்களை தேர்வு செய்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Murugan Maanadu , Udhayanidhi Stalin First Published : August 26, 2024, 6:55 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.