தபால் துறையில் அதிக வட்டி கிடைக்கும் திட்டங்கள் விவரங்கள் இதோ.. இந்திய அஞ்சல் துறை மூலம் மக்களுக்கு பலன் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அஞ்சல் துறையில் பல்வேறு திட்டங்கள் மூலம் முதலீடு செய்து குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் கூடிய தொகையை பெற்று கொள்ள முடியும். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை மூலம் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம்: தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு என்பது மாதாமாதம் வட்டி தரக்கூடிய சேமிப்புத் திட்டம் ஆகும். 7.4% வட்டி தரப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள். ஒருவேளை இந்தத் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே நீங்கள் வெளியேற நினைத்தால் முதல் ஓராண்டிற்கு பணத்தை எடுக்க முடியாது. ஓராண்டிற்கு பின்னரோ, மூன்று ஆண்டிற்கு முன்னரோ கணக்கை முடித்தால் உங்கள் முதலீட்டில் 2% சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேற நினைத்தால் 1% பிடித்தம் செய்யப்படும். எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தில் நாம் பெற்ற வட்டித்தொகையோடு ஒப்பிடும் போது முதலீட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை குறைவாகவே இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் 37,000 ரூபாய் வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தத் திட்டத்தின் உச்சபட்ச முதலீடான 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5,55,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதையும் வாசிக்க: இப்படி ஒரு அரசு பள்ளியா! மாணவர்களுக்காக என்ன வேனா செய்வோம்..! நிரூபித்து காட்டிய ஆசிரியர்கள்! இந்த திட்டத்தில் சேருவதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை பான் கார்டு 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். மேலும் கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரை இந்த திட்டத்தில் சேர முடியும். அஞ்சல் துறையின் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம். வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் கூடிய தொகையை பெற்று கொள்ள முடியும். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை மூலம் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம்: வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.