TAMIL-NADU

"மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்" - ரஜினிகாந்த் பேச்சு

மேலிட உத்தரவில்லாமல் கலைஞர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்திருக்கமாட்டார் என சென்னையில் நடைபெற்ற கலைஞர் எனும் தாய், நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவராலும் பாராட்டப்படுபவர் கருணாநிதி எனவும், கலைஞர் கருணாநிதி குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அரை மணி நேரம் பாராட்டி பேசியிருந்தார் என்றால், அதை அவர் மட்டும் பேசியிருக்க மாட்டார். மேலிட உத்தரவு வந்திருக்கும் என தெரிவித்தார். தொடர் தேர்தல் வெற்றியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைக்கு சான்று என கூறிய ரஜினி, புதிய மாணவர்களை சமாளித்துவிடலாம், ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம் என மூத்த அமைச்சர்களை குறிப்பிட்டு கலகலப்பூட்டினார். இதனால் அரங்கமே சிரிப்பலையால் குலுங்கியது. இதையும் படிக்க: கலைஞரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர்.. ரஜினி பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தான் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கலைஞர் கருணாநிதி என்றும், தனக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் எனவும் முதலமைச்சர் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 1999 ஆம் ஆண்டு வெளியான முதல்வன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்தை அணுகிய போது, தமிழ்நாட்டில் பெரியவர் கலைஞர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், எனவே முதல்வன் படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்காது எனக்கூறி விலகியவர் ரஜினிகாந்த் என பாராட்டினார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / "மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்" - ரஜினிகாந்த் பேச்சு "மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்" - ரஜினிகாந்த் பேச்சு “கலைஞரை பற்றி அரை மணி நேரம் ராஜ்நாத் சிங் பேசுகிறார் என்றால், அதை ராஜ்நாத் சிங் மட்டும் பேசி இருக்க மாட்டார், மேலே இருந்து உத்தரவு வந்திருக்கும்” என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 25, 2024, 7:21 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மேலிட உத்தரவில்லாமல் கலைஞர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்திருக்கமாட்டார் என சென்னையில் நடைபெற்ற கலைஞர் எனும் தாய், நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவராலும் பாராட்டப்படுபவர் கருணாநிதி எனவும், கலைஞர் கருணாநிதி குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அரை மணி நேரம் பாராட்டி பேசியிருந்தார் என்றால், அதை அவர் மட்டும் பேசியிருக்க மாட்டார். மேலிட உத்தரவு வந்திருக்கும் என தெரிவித்தார். விளம்பரம் தொடர் தேர்தல் வெற்றியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைக்கு சான்று என கூறிய ரஜினி, புதிய மாணவர்களை சமாளித்துவிடலாம், ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம் என மூத்த அமைச்சர்களை குறிப்பிட்டு கலகலப்பூட்டினார். இதனால் அரங்கமே சிரிப்பலையால் குலுங்கியது. இதையும் படிக்க: கலைஞரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர்.. ரஜினி பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தான் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கலைஞர் கருணாநிதி என்றும், தனக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் எனவும் முதலமைச்சர் கூறினார். உங்கள் கண் பார்வையை கூர்மையாக்கும் 8 உலர் பழங்கள்.! மேலும் செய்திகள்… முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 1999 ஆம் ஆண்டு வெளியான முதல்வன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்தை அணுகிய போது, தமிழ்நாட்டில் பெரியவர் கலைஞர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், எனவே முதல்வன் படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்காது எனக்கூறி விலகியவர் ரஜினிகாந்த் என பாராட்டினார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: CM MK Stalin , DMK leader Karunanidhi , Karunanidhi Tribute Meeting , Rajinikanth First Published : August 25, 2024, 7:21 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.