ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலின் புதிய புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் அண்மைக்கால புகைப்படம் காவல் துறைக்கு கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை வழக்கில் சம்போ செந்தில் உள்ளிட்டோரை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, 2020ஆம் ஆண்டு வரை அவரிடம் பேசியது தெரியவந்துள்ளது. அப்போது, சம்போ செந்திலின் உருவம் குறித்த அண்மைக்கால புகைப்படத்தைப் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வைத்து சம்போ செந்திலை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தநிலையில், தற்போதைய புகைப்படம் கிடைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும், விபிஎன் தொழில்நுட்பம் மூலம் நாளொன்றுக்கு 5 பேரிடம் சம்போ செந்தில் பேசி வருவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதையும் படிக்க: கலைஞர் நாணயத்தின் விலை ஏன் ₹10,000 தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல் இதோ இதனிடையே, நாட்டு வெடிகுண்டு கொடுக்க மூளையாக செயல்பட்ட ரவுடி புதூர் அப்புவைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் உத்தரவின்பேரில், புதூர் அப்பு, நாட்டு வெடிகுண்டுகளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு Armstrong murder case - கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வைத்து சம்போ செந்திலை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தநிலையில், தற்போதைய புகைப்படம் கிடைத்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 11:02 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலின் புதிய புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் அண்மைக்கால புகைப்படம் காவல் துறைக்கு கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை வழக்கில் சம்போ செந்தில் உள்ளிட்டோரை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, 2020ஆம் ஆண்டு வரை அவரிடம் பேசியது தெரியவந்துள்ளது. அப்போது, சம்போ செந்திலின் உருவம் குறித்த அண்மைக்கால புகைப்படத்தைப் பெற்றுள்ளனர். விளம்பரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வைத்து சம்போ செந்திலை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தநிலையில், தற்போதைய புகைப்படம் கிடைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும், விபிஎன் தொழில்நுட்பம் மூலம் நாளொன்றுக்கு 5 பேரிடம் சம்போ செந்தில் பேசி வருவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதையும் படிக்க: கலைஞர் நாணயத்தின் விலை ஏன் ₹10,000 தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல் இதோ இதனிடையே, நாட்டு வெடிகுண்டு கொடுக்க மூளையாக செயல்பட்ட ரவுடி புதூர் அப்புவைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் உத்தரவின்பேரில், புதூர் அப்பு, நாட்டு வெடிகுண்டுகளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Armstrong Murder , Crime News , murder case First Published : August 25, 2024, 10:01 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.