மறைந்த விஜயகாந்தின் 72-ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் கேப்டன் ஆலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, அவரது முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேமுதிகவின் கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா, அவரது உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டினார். அப்போது, விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உணர்ச்சி மேலிட அழுதனர். பின்னர், நினைவிடத்தின் அருகே சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள விஜயகாந்தின் ஆளுயர சிலையை பிரேமலதா விஜயகாந்த திறந்து வைத்தார். அப்போது, சிலையை கட்டி அணைத்து முத்தமிட்ட பிரேமலதா, கண்ணீர் சிந்தி அன்பை வெளிப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் ஆலயம் என பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூறினார். விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் தேம்பித் தேம்பி அழுத சண்முகபாண்டியன் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Also Read : மூத்த நடிகர்கள் பல்லு போயும் நடிக்கிறாங்க - ரஜினிக்கு துரைமுருகன் பதில் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அதிகாலையிலேயே தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்தனர். அதே சமயம், சில தொண்டர்கள் விஜயகாந்தின் பிரிவை தாள முடியாமல் தேம்பித் தேம்பி அழுததையும் காண முடிந்தது. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / 'கேப்டன் ஆலயம்' தேமுதிக தலைமையக பெயர் மாற்றம்.. விஜயகாந்த் சிலை முன் தேம்பி தேம்பி அழுத குடும்பத்தினர் 'கேப்டன் ஆலயம்' தேமுதிக தலைமையக பெயர் மாற்றம்.. விஜயகாந்த் சிலை முன் தேம்பி தேம்பி அழுத குடும்பத்தினர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா, அவரது உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டினார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : August 26, 2024, 7:53 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் மறைந்த விஜயகாந்தின் 72-ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் கேப்டன் ஆலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, அவரது முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேமுதிகவின் கொடியை ஏற்றினார். விளம்பரம் இதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா, அவரது உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டினார். அப்போது, விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உணர்ச்சி மேலிட அழுதனர். பின்னர், நினைவிடத்தின் அருகே சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள விஜயகாந்தின் ஆளுயர சிலையை பிரேமலதா விஜயகாந்த திறந்து வைத்தார். அப்போது, சிலையை கட்டி அணைத்து முத்தமிட்ட பிரேமலதா, கண்ணீர் சிந்தி அன்பை வெளிப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் ஆலயம் என பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூறினார். விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் தேம்பித் தேம்பி அழுத சண்முகபாண்டியன் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Also Read : மூத்த நடிகர்கள் பல்லு போயும் நடிக்கிறாங்க - ரஜினிக்கு துரைமுருகன் பதில் விளம்பரம் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அதிகாலையிலேயே தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்தனர். அதே சமயம், சில தொண்டர்கள் விஜயகாந்தின் பிரிவை தாள முடியாமல் தேம்பித் தேம்பி அழுததையும் காண முடிந்தது. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: DMDK , Premalatha Vijayakanth , Vijayakanth First Published : August 26, 2024, 7:53 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.