தங்க பத்திர திட்டம் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாகஇருந்த காரணத்தினால் அதனை குறைப்பதற்காக தங்கப் பத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஆனால் சமீபகாலமாக தங்கத்தில் முதலீடு செய்ய அதிகமானோர் விரும்பிய காரணத்தினால் தங்க பத்திரம் திட்டம் தற்பொழுது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இப்படிப் பேசப்பட்டு வரக்கூடிய இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக எவ்வாறு பயன் பெறலாம் என்றும், இத்திட்டத்தின் நன்மைகள் குறித்தும், மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் முத்துராஜ் நம்முடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தங்கத்தை பொதுவாகவே பொருளாதார பார்வையில் தான் பார்க்கின்றோம். அதை ஒரு முதலீட்டு பார்வையில் பார்ப்பதில்லை. அதனால்தான் முதலில் இந்திய அரசாங்கம் தங்க பத்திரம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. உலகத்தில் அதிக தங்கம் புழங்கக்கூடிய நாடு இந்தியா. அந்த அடிப்படையில் தங்கம் இல்லாத ஒரு வீடோ இல்லை. ஆனால் அதே அடிப்படையில் தங்கம் சார்ந்த முதலீட்டை பார்க்கும் பொழுது மிகவும் குறைவாக உள்ளது. ஏனென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாமல் இருக்கின்றது. தங்க பத்திர திட்டம் என்றால், முதலீட்டு பார்வையில் தங்கத்தின் அடிப்படையில், உங்களிடம் ஒரு லட்சம் அல்லது மாதம் மாதம் ரூ.50 கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஆர்பிஐ கீழ் இருக்கக்கூடிய வங்கியில் தங்க பத்திரத் திட்டத்தின் தாராளமாக முதலீடு பண்ணலாம். இதற்கான விளக்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மிகவும் தெள்ளத் தெளிவாக சொல்லப்படும். இதையும் வாசிக்க : ரம்புட்டான் பழத்தை இவர்களெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும் … ஏன் தெரியுமா..? இத்திட்டத்தினுடைய நன்மைகள் என்று பார்க்கும் பொழுது,உங்கள் அனைவருக்குமே தெரியும் தங்கத்தின் விலை தினமுமே மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தங்க பத்திரத்தில் அப்படி ஒரு சூழ்நிலை இருக்காது. குறிப்பாக குறைந்தபட்ச வட்டியும், முதலீட்டிற்கான முழு உத்தரவாதமும் அளிக்கப்படும். அதேபோல் தங்கத்தில் முதலீடு செய்து இருக்கின்றோம் என்ற திருப்தி இருக்கும். இத்திட்டத்தின் அவசியம் என்னவென்றால்,இளைஞர்கள் அனைவருமே முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். சேமிப்பு சார்ந்த முதலீடு தேவைப்படுவதினால், வருமானத்தில் கிடைக்கும் மிச்சத்தை சேமிப்பதற்கு, இந்த தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் நன்மை அளிக்கும். அதேபோல் மூன்று ஆண்டுகள், ஐந்தாண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் இந்த தங்க புத்திரத்தில் முதலீடு செய்யும் பொழுது, தங்கத்தின் விலை அடிப்படையில் அதனுடைய மதிப்பு கூடிக்கொண்டே வருவதினால் உங்களுக்கான முழு பயன் இந்த திட்டத்தில் கிடைக்கும். நம்முடைய நாட்டில் அதிகமான தங்கங்கள் இருக்கின்றது உங்களுக்கு தெரியும். தங்கம் இல்லாத வீடு ஒன்று கிடையாது. ஆனால் ஒவ்வொரு வீட்டில் தங்கம் எவ்வளவு வைத்திருக்கின்றோம் என்ற கணக்கு அரசாங்கத்திற்கும், மத்திய அரசிற்கும் தெரியாது. இதை எப்படி முதலீடாக மாற்றுவது என்றால் அதற்கு இந்த தங்க பததிர திட்டம் மிக மிக அவசியம். கணக்கில் வராத சேமிப்பை கணக்கில் வராத தங்க இருப்பை முதலீடாக மாற்றுவதற்கான முக்கிய திட்டம் இந்த தங்க பத்திரம் திட்டம். அதேபோல் தங்கத்தின் விலை குறைந்து விட்டால்,நமக்கு நஷ்டம், தங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்து போன்ற அச்சங்கள் தேவையில்லை. ஏனென்றால், மத்திய அரசு ஆர்பிஐயின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வங்கியில் அதிகப்படியான நன்மையே கிடைக்கும், தவிர நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மேலும் தங்க சேமிப்பு திட்டம் மற்றும் தங்க பத்திரம் என்று பார்க்கும் பொழுது,தங்க சேமிப்பு திட்டத்தில் ஒரு தனியார் நகைக்கடையைச் சார்ந்தோ அல்லது ஒரு வங்கியைச் சார்ந்தோ இருக்கும்பொழுது, அதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தங்க பத்திர திட்டம் பொருளாதாரப் பார்வையில் பார்க்கும் பொழுது, தங்க சேமிப்பு திட்டத்தில் முக்கியமான திட்டம் என்றால் அது தங்க பத்திர திட்டம் தான். ஆகையால் இளைஞர்களிலிருந்து அனைவருமே எந்த ஒரு பயமும் இன்றி இந்த தங்க பத்திர திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்து அதிகப்படியான நன்மை அடையலாம் எனறு தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.