TAMIL-NADU

"ரஜினி என்றும் என் நண்பர்... நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்": அமைச்சர் துரைமுருகன்

“எங்கள் நகைச் சுவையை பகைச் சுவையாக பயன்படுத்த வேண்டாம்; நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலர் பங்கேற்று இருந்தனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்சனை இல்லை; பழைய மாணவர்களைச் சமாளிப்பதுதான் சிரமம். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல; ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். Also Read: ரஜினிகாந்த் பேசியது நகைச்சுவையாக இருந்தாலும் அவர் பேசியது உண்மை - Priyan Journalist | Rajinikanth அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். கலைஞர் ஒரு விஷயத்தை சொன்னால், அதற்கு அப்படியா! சந்தோஷம் என்று துரை முருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது என்றார். ரஜினிகாந்தின் பேச்சை கேட்டு மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிரித்து ரசித்தனர். ரஜினியை தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் என்னை விட வயதில் மூத்தவர். எனக்கு அறிவுரை கூறிய ரஜினிகாந்த் நீங்கள் சொன்னதை நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். நான் தவறிவிட மாட்டேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி என்றார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனை ‘பழைய ஸ்டூடண்ட்’ என்று ரஜினிகாந்த் விமர்சனம் செய்துள்ளார் என சமூக வலைதளங்களில் அதிகளவில் கருத்துகள் பகிரப்பட்டன. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து நடிக்கிறதுனாலதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என பதில் அளித்தார். இந்நிலையில், விஜயவாடாவில் நடைபெறும் வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களுடைய நட்பு எப்பொழுதும் தொடரும் என்றார். இந்நிலையில், ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நகைச் சுவையை பகைச் சுவையாக பயன்படுத்த வேண்டாம் இதற்கிடையே, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், விழாவின் நடுவிலேயே மேடையில் இருந்து இறங்கி வந்து பேட்டி கொடுத்தார். அதில், எங்கள் நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.