TAMIL-NADU

அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அதிரடி கேள்வி!

ஈபிஎஸ் - சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டது எப்படி என ஈபிஎஸ்சிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையும் படிக்க: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… யாரை எல்லாம் சந்திக்கிறார் தெரியுமா? இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆரம்பத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து திருத்த மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அதிரடி கேள்வி! அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அதிரடி கேள்வி! ஈபிஎஸ் - சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 27, 2024, 6:35 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டது எப்படி என ஈபிஎஸ்சிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விளம்பரம் இதையும் படிக்க: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… யாரை எல்லாம் சந்திக்கிறார் தெரியுமா? இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆரம்பத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். விளம்பரம் நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து திருத்த மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: ADMK , Chennai High court , Edappadi Palaniswami , O Pannerselvam , OPS - EPS First Published : July 27, 2024, 6:35 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.