CHENNAI

நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள்.. என்ன நடந்தது?

மதுரவாயலில் பிரபல சினிமா நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள், நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். ஷாஜகான், குசேலன், மிருகம் என பல்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை சோனா. இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28-வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (03.10.2024) இரவு 7 மணி அளவில் இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறிக் குதித்து மர்ம நபர்கள் இருவர் உள்ளே புகுந்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். இதையும் படிக்க: அப்பாவி மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காக்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல் அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்த போது, இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். உடனே சோனா கூச்சலிடவே, மர்ம நபர்கள் ஒளித்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்து காட்டி மிரட்டி உள்ளனர். அதில் அதிர்ச்சியடைந்த சோனா, திருடர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றதில் கீழே விழுந்து காலில் சுளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பிரபல நடிகையின் வீட்டில் திருட முயன்ற திருடர்கள், நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பிய சம்பவம் சென்னை மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள்.. என்ன நடந்தது? நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள்.. என்ன நடந்தது? நாய் குறைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்த போது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 4, 2024, 10:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மதுரவாயலில் பிரபல சினிமா நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள், நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். ஷாஜகான், குசேலன், மிருகம் என பல்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை சோனா. இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28-வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (03.10.2024) இரவு 7 மணி அளவில் இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறிக் குதித்து மர்ம நபர்கள் இருவர் உள்ளே புகுந்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். விளம்பரம் இதையும் படிக்க: அப்பாவி மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காக்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல் அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்த போது, இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். உடனே சோனா கூச்சலிடவே, மர்ம நபர்கள் ஒளித்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்து காட்டி மிரட்டி உள்ளனர். அதில் அதிர்ச்சியடைந்த சோனா, திருடர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றதில் கீழே விழுந்து காலில் சுளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. விளம்பரம் தமிழகத்தில் உள்ள ஆற்காடு டெல்லி கேட்… வரலாறும் பின்னணி கதையும் இதோ.! மேலும் செய்திகள்… இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பிரபல நடிகையின் வீட்டில் திருட முயன்ற திருடர்கள், நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பிய சம்பவம் சென்னை மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actress , burglars , Chennai , Crime News , Latest News First Published : October 4, 2024, 10:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.