CHENNAI

சென்னையில் ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்! பேருந்துகளில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

கோப்புப்படம் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.20 மணி முதல் 1 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தாம்பரத்தில் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதியது. தாம்பரத்தில் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியால் வரும் 14 ஆம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி வார விடுமுறை என்பதால் பெரும் அளவில் பாதிப்பு இல்லாத நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் கடைசி ரயிலில் அடித்து பிடித்து ஏறினர். இதையும் படிக்க: தொழில் வரி 35% வரை உயர்வு… சென்னையில் எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு? - முழு விவரம்! அதேநேரம், கடற்கரையிலிருந்து பல்லாவரம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக, தாம்பரம் மற்றும் பல்லாவரத்திலிருந்து கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையில் ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்! பேருந்துகளில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னையில் ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்! பேருந்துகளில் அலைமோதிய பயணிகள் கூட்டம் கோப்புப்படம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 14 ஆம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 5, 2024, 1:52 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.20 மணி முதல் 1 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தாம்பரத்தில் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதியது. தாம்பரத்தில் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியால் வரும் 14 ஆம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி வார விடுமுறை என்பதால் பெரும் அளவில் பாதிப்பு இல்லாத நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் கடைசி ரயிலில் அடித்து பிடித்து ஏறினர். விளம்பரம் இதையும் படிக்க: தொழில் வரி 35% வரை உயர்வு… சென்னையில் எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு? - முழு விவரம்! அதேநேரம், கடற்கரையிலிருந்து பல்லாவரம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக, தாம்பரம் மற்றும் பல்லாவரத்திலிருந்து கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai local Train , Electric Train First Published : August 5, 2024, 1:52 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.