ஆர்.என்.ரவி துணைவேந்தர் இல்லாமல், தென்னிந்தியாவின் பழமையான சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் ஆளுநரும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றதுதான். இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று மெட்ராஸ் பல்கலைக்கழகம். எழில்மிகு மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் ராதாகிருஷ்ணன் முதல் ஏபிஜே அப்துல் கலாம் வரை 5 குடியரசுத் தலைவர்களை தந்துள்ளது. மேலும் சர்.சி.வி ராமன் போல புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளது. இப்படி பல திறமையாளர்களை உருவாக்கிய சென்னை பல்கலைகழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பட்டங்கள் வழங்கப்படாததால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க முடியாத நிலையும், வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரசியல்வாதிகளும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று பல்கலைக்கழக வேந்தரும், ஆளுருமான ஆர்.என்.ரவி அறிவித்தார். இதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். உயர்கல்வி துறையின் செயலாளர் பிரதீப் யாதவன் கையொப்பமிட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் சிறப்பு, நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றதுதான். பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கமாட்டேன் என ஆளுநர் கூறியிருந்த நிலையில், அவர் பங்கேற்ற பல பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார். இதனிடையே தமிழகத்தில் உயர் கல்வி மோசமாக இருப்பதாக ஆளுநர் பேசியது, உரசலை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில்தான் மெட்ராஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் மேடையை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் பொன்முடி. முன்னதாக ஆளுநரும் வேந்தருமான ஆர்.என். ரவியை பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார் பொன்முடி. இந்த திடீர் சமரசம் ஆளுநருக்கு நெருக்கடியா? அல்லது பொன்முடிக்கு நெருக்கடியா? என பல அரசியல் கேள்விகளை கட்டவிழித்துவிட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு பட்டம் கிடைச்சுருச்சி பசங்க என்ஜாய்..நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் லிபிகா பழனிவேல். None
Popular Tags:
Share This Post:
Chennai Rain : கிண்டி 5 பர்லாங் சாலையில் ஒரே நாளில் வடிந்த மழைநீர்.. எப்படி தெரியுமா?
October 16, 2024Red Alert : இரவு 11 மணிக்கு கடைசி ரயில்.. சென்னையில் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்!
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 4, 2024
-
- September 24, 2024
-
- September 24, 2024
நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை...
- By Sarkai Info
- September 24, 2024
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி... அடையாறு வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
- By Sarkai Info
- September 20, 2024
Featured News
Latest From This Week
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துடன் 6 மேம்பாலங்கள் : திட்ட இயக்குனர் பிரத்யேக பேட்டி
CHENNAI
- by Sarkai Info
- August 17, 2024
நவீன வசதிகளுடன் பட்டினப்பாக்கத்தில் ஜொலிக்கும் மீன் அங்காடி.. சிறப்பு அம்சங்கள் என்ன?
CHENNAI
- by Sarkai Info
- August 13, 2024
சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!
CHENNAI
- by Sarkai Info
- August 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.