CHENNAI

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம் வேதனை

Tuticorine Gun Fire உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டி ஜி பி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது என்பது தான் தங்களது கவலை என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். தமிழ் செய்திகள் / சென்னை / "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம் வேதனை "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம் வேதனை Tuticorine Gun Fire உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது - நீதிபதிகள் படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : July 29, 2024, 8:00 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. விளம்பரம் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டி ஜி பி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். விளம்பரம் இதையும் படிங்க: பாஜகவினர் போலி இந்துக்கள்… ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் கடும் அமளி! ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது என்பது தான் தங்களது கவலை என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Madras High court First Published : July 29, 2024, 8:00 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.