CHENNAI

மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மாநகர் போக்குவரத்து கழகம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகரப் போக்குவரத்து கழகத்தை தரம் உயர்த்தும் வகையில் , உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 10 சதவிகித பேருந்துகளின் வரவு - செலவு வித்தியாசத் தொகையாக 21 கோடியே 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவிகித பேருந்துகளின் வரவு- செலவு வித்தியாசத் தொகையாக 300 கோடி ரூபாயை, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும், இதற்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் செய்திகள் / சென்னை / மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! மாநகர் போக்குவரத்து கழகம் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்க ரூ.111 கோடி ஒதுக்கீடு படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : August 22, 2024, 10:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகரப் போக்குவரத்து கழகத்தை தரம் உயர்த்தும் வகையில் , உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 10 சதவிகித பேருந்துகளின் வரவு - செலவு வித்தியாசத் தொகையாக 21 கோடியே 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் அதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவிகித பேருந்துகளின் வரவு- செலவு வித்தியாசத் தொகையாக 300 கோடி ரூபாயை, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய வகை பொருள் கண்டெடுப்பு.. ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! அதேபோல பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும், இதற்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: MTC , Tamilnadu First Published : August 22, 2024, 10:32 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.