CHENNAI

நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை...

சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு வைத்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் “நோ பார்க்கிங்” சைன் போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொது சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: திருமண உதவித் திட்டங்களுக்கு தங்கம் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை நடவடிக்கை மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து 103 அல்லது 100 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன்பு, அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதியை பெற வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை... நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை... சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடைவிதித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : September 24, 2024, 12:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு வைத்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் “நோ பார்க்கிங்” சைன் போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டுள்ளது. விளம்பரம் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொது சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: திருமண உதவித் திட்டங்களுக்கு தங்கம் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை நடவடிக்கை மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து 103 அல்லது 100 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன்பு, அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதியை பெற வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Police , Chennai Traffic , Latest News , Tamilnadu news First Published : September 24, 2024, 12:41 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.