CHENNAI

ஆக.14 வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - பயணிகளுக்காக போக்குவரத்துத்துறை எடுத்த நடவடிக்கை

கோப்புப்படம் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்படுவதால், அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக வரும் 14-ஆம் தேதிவரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், தாம்பரத்திற்கு ரயில்கள் செல்லாது எனவும், கடற்கரை முதல் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. மலை கிராமங்களில் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு! இதனால், அந்த வழித்தடத்தில் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக தாம்பரம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க கூடுவாஞ்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / ஆக.14 வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - பயணிகளுக்காக போக்குவரத்துத்துறை எடுத்த நடவடிக்கை ஆக.14 வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - பயணிகளுக்காக போக்குவரத்துத்துறை எடுத்த நடவடிக்கை கோப்புப்படம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், தாம்பரத்திற்கு ரயில்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 3, 2024, 10:32 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்படுவதால், அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக வரும் 14-ஆம் தேதிவரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், தாம்பரத்திற்கு ரயில்கள் செல்லாது எனவும், கடற்கரை முதல் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதையும் படிக்க: வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. மலை கிராமங்களில் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு! இதனால், அந்த வழித்தடத்தில் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக தாம்பரம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க கூடுவாஞ்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai local Train , Electric Train First Published : August 3, 2024, 10:32 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.