CHENNAI

சென்னையின் முக்கிய அடையாளம்... பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்!

அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான அண்ணா மேம்பாலம், 50 ஆண்டுகளை நிறைவு செய்து கம்பீரமாக நிற்கிறது. 1970 காலகட்டங்களிலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தபோது அதை குறைப்பதற்காக கட்டப்பட்டு, 1973இல் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறக்கப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம். ஜெமினி ஸ்டுடியோ அருகில் அமைந்ததால் சிலர் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பதுண்டு. இரு கரங்களைக் கொண்டு வித்தியாசமான வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் அரை கிலோ மீட்டராகும். சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் இருந்தாலும் சென்னையின் முதல் சாலை மேம்பாலம் என்ற பெருமையை தக்கவைத்து நிற்கிறது கோடிக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்ற இந்த பழைய பாலம். நவீன வசதிகளாலும் தொழில்நுட்பங்களாலும் கத்திப்பாரா பாலம் உட்பட எத்தனையோ பாலங்கள் இன்றைக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கின்றன. ஆனால் அன்றைய காலகட்டங்களில் சென்னையின் ஹாட்ஸ்பாட்டான அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும் பங்கு வகித்து இன்றளவும் தனது பங்களிப்பை வலுக்குறையாமல் தொடர்ந்து வருகிறது இந்த அண்ணா மேம்பாலம். இதையும் படிக்க: பிரபல ஸ்டார் ஓட்டல்களின் பார் உரிமங்கள் ரத்து… சென்னையில் அதிரடி 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள அண்ணா மேம்பாலம் தற்போது மெருகூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் வண்ண விளக்குகள், பூச்செடிகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னைவாசிகள் மட்டுமின்றி சென்னைக்கு அந்நாட்களில் வந்து செல்வோருக்கும் இந்த பாலத்தில் பயணித்து எல்ஐசி-யை அன்னாந்து பார்த்தால்தான் சென்னைப் பயணமே முழுமைபெற்றதாய்த் தோன்றும். சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்… pic.twitter.com/H6XDLCguAP அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் பயணித்த, பயணிக்கும் கோடிக்கணக்கானோரில் நெஞ்சங்களிலும் அண்ணா மேம்பாலம் நீங்காத இடம் பிடித்திருக்கும்! நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ஆனந்த்ராஜ் உடன் செய்தியாளர் செல்வக்குமார். தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையின் முக்கிய அடையாளம்... பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்! சென்னையின் முக்கிய அடையாளம்... பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்! அண்ணா மேம்பாலம் சென்னைவாசிகள் மட்டுமின்றி சென்னைக்கு அந்நாட்களில் வந்து செல்வோருக்கும் இந்த பாலத்தில் பயணித்து எல்ஐசி-யை அன்னாந்து பார்த்தால்தான் சென்னைப் பயணமே முழுமைபெற்றதாய்த் தோன்றும். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 4, 2024, 2:47 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான அண்ணா மேம்பாலம், 50 ஆண்டுகளை நிறைவு செய்து கம்பீரமாக நிற்கிறது. 1970 காலகட்டங்களிலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தபோது அதை குறைப்பதற்காக கட்டப்பட்டு, 1973இல் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறக்கப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம். ஜெமினி ஸ்டுடியோ அருகில் அமைந்ததால் சிலர் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பதுண்டு. இரு கரங்களைக் கொண்டு வித்தியாசமான வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் அரை கிலோ மீட்டராகும். சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் இருந்தாலும் சென்னையின் முதல் சாலை மேம்பாலம் என்ற பெருமையை தக்கவைத்து நிற்கிறது கோடிக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்ற இந்த பழைய பாலம். நவீன வசதிகளாலும் தொழில்நுட்பங்களாலும் கத்திப்பாரா பாலம் உட்பட எத்தனையோ பாலங்கள் இன்றைக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கின்றன. விளம்பரம் ஆனால் அன்றைய காலகட்டங்களில் சென்னையின் ஹாட்ஸ்பாட்டான அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும் பங்கு வகித்து இன்றளவும் தனது பங்களிப்பை வலுக்குறையாமல் தொடர்ந்து வருகிறது இந்த அண்ணா மேம்பாலம். இதையும் படிக்க: பிரபல ஸ்டார் ஓட்டல்களின் பார் உரிமங்கள் ரத்து… சென்னையில் அதிரடி 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள அண்ணா மேம்பாலம் தற்போது மெருகூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் வண்ண விளக்குகள், பூச்செடிகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விளம்பரம் சென்னைவாசிகள் மட்டுமின்றி சென்னைக்கு அந்நாட்களில் வந்து செல்வோருக்கும் இந்த பாலத்தில் பயணித்து எல்ஐசி-யை அன்னாந்து பார்த்தால்தான் சென்னைப் பயணமே முழுமைபெற்றதாய்த் தோன்றும். சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்… pic.twitter.com/H6XDLCguAP — M.K.Stalin (@mkstalin) August 3, 2024 விளம்பரம் அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் பயணித்த, பயணிக்கும் கோடிக்கணக்கானோரில் நெஞ்சங்களிலும் அண்ணா மேம்பாலம் நீங்காத இடம் பிடித்திருக்கும்! நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ஆனந்த்ராஜ் உடன் செய்தியாளர் செல்வக்குமார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Anna salai , Chennai First Published : August 4, 2024, 2:46 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.