CHENNAI

Red Alert : இரவு 11 மணிக்கு கடைசி ரயில்.. சென்னையில் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்படிருக்கும் சூழலில் அத்தியாவசிய தேவைகளுக்கும் அத்தியாவசிய துறைகளில் பணி புரிபவர்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், அப்படி வந்து செல்பவர்களுக்கு ஏதுவாகவும், சாலை மார்க்கமாக போக்குவரத்து தடைபட்டாலும், தொடர்ந்து மக்கள் பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்கும் வகையில், கூடுதலாக மெட்ரோ ரயில்களை இயக்குகிறது சென்னை மெட்ரோ. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், அனைத்து ரயில் முனையங்களில் இருந்தும், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை ரயில் நிலையம் வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரை 3 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள் : பேஜர்களை போல இ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியுமா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்! தற்போது 47 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் இரவு 11 மணிக்கு கடைசி ரயில் புறப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / Red Alert : இரவு 11 மணிக்கு கடைசி ரயில்.. சென்னையில் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்! Red Alert : இரவு 11 மணிக்கு கடைசி ரயில்.. சென்னையில் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்! Chennai Metro : கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 15, 2024, 10:03 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்படிருக்கும் சூழலில் அத்தியாவசிய தேவைகளுக்கும் அத்தியாவசிய துறைகளில் பணி புரிபவர்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், அப்படி வந்து செல்பவர்களுக்கு ஏதுவாகவும், சாலை மார்க்கமாக போக்குவரத்து தடைபட்டாலும், தொடர்ந்து மக்கள் பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்கும் வகையில், கூடுதலாக மெட்ரோ ரயில்களை இயக்குகிறது சென்னை மெட்ரோ. விளம்பரம் கொழுப்பு கல்லீரலுக்கான கிரீன் டீ, காபி மற்றும் பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்.! மேலும் செய்திகள்… இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், அனைத்து ரயில் முனையங்களில் இருந்தும், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை ரயில் நிலையம் வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரை 3 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதையும் படியுங்கள் : பேஜர்களை போல இ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியுமா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்! தற்போது 47 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் இரவு 11 மணிக்கு கடைசி ரயில் புறப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News First Published : October 15, 2024, 10:03 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.