CHENNAI

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி - முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து பாரிமுனையை நோக்கி, காமராஜர் சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையைப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக தங்கள் இலக்கை அடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அண்ணா சிலையிலிருந்து மாநகரப் பேருந்துகள் வாலாஜா சாலை, ஆர்.கே.சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம் எனவும் கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.கே.சாலை அண்ணா சாலை வழியாக பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலையில் செல்ல மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி - முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி - முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அண்ணா சிலையிலிருந்து மாநகரப் பேருந்துகள் வாலாஜா சாலை, ஆர்.கே.சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 6, 2024, 7:47 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் திருவான்மியூரில் இருந்து பாரிமுனையை நோக்கி, காமராஜர் சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையைப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக தங்கள் இலக்கை அடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அண்ணா சிலையிலிருந்து மாநகரப் பேருந்துகள் வாலாஜா சாலை, ஆர்.கே.சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம் எனவும் கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.கே.சாலை அண்ணா சாலை வழியாக பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. விளம்பரம் வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலையில் செல்ல மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Air force , Chennai , Chennai Traffic , Indian Air force Day , Latest News First Published : October 6, 2024, 7:45 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.