CHENNAI

நவீன வசதிகளுடன் பட்டினப்பாக்கத்தில் ஜொலிக்கும் மீன் அங்காடி.. சிறப்பு அம்சங்கள் என்ன?

மீன் அங்காடி சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் கடைகள் அமைத்து, மீன் வியாபாரம் செய்து வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், மீனவர்கள், வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு தீர்வு காணும் வகையில், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்புகளுக்கு நடுவில் 14 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மற்ற மீன் அங்காடிகள் போன்று, இங்கே எந்த தூர்நாற்றமும் இருக்காத வகையிலும், தண்ணீர் தேங்காத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்டமான சூழலில், 366 கடைகள் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ளன. மீன்களை வெட்டுவதற்கு தனியாக இரண்டு இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் விபாயாரம் செய்த தங்கள் நிலை, இப்போது மாறியுள்ளதாக மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சகல வசதிகளும் மீன் சந்தையில் உள்ளன. 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன், கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் அதிநவீன மீன் அங்காடியில் திருநங்கைகளுக்கு 3 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. யார் யாருக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. தமிழ் செய்திகள் / சென்னை / நவீன வசதிகளுடன் பட்டினப்பாக்கத்தில் ஜொலிக்கும் மீன் அங்காடி.. சிறப்பு அம்சங்கள் என்ன? நவீன வசதிகளுடன் பட்டினப்பாக்கத்தில் ஜொலிக்கும் மீன் அங்காடி.. சிறப்பு அம்சங்கள் என்ன? மீன் அங்காடி குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன், கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 13, 2024, 8:47 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K தொடர்புடைய செய்திகள் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் கடைகள் அமைத்து, மீன் வியாபாரம் செய்து வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், மீனவர்கள், வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு தீர்வு காணும் வகையில், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்புகளுக்கு நடுவில் 14 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விளம்பரம் மற்ற மீன் அங்காடிகள் போன்று, இங்கே எந்த தூர்நாற்றமும் இருக்காத வகையிலும், தண்ணீர் தேங்காத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்டமான சூழலில், 366 கடைகள் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ளன. மீன்களை வெட்டுவதற்கு தனியாக இரண்டு இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் விபாயாரம் செய்த தங்கள் நிலை, இப்போது மாறியுள்ளதாக மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சகல வசதிகளும் மீன் சந்தையில் உள்ளன. 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். விளம்பரம் குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன், கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் அதிநவீன மீன் அங்காடியில் திருநங்கைகளுக்கு 3 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. யார் யாருக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai First Published : August 13, 2024, 8:47 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.