NATIONAL

Ratan Tata : ரத்தன் டாடாவுடனான நட்பு எப்படிப்பட்டது? - சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் நேற்று பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினர். பிறகு இன்று மாலை அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. பல்வேறு தலைவர்கள் ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்திருந்தாலும், ஒரு இளைஞரின் இரங்கல் பெரும் கவனம் பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்பாக அந்த இளைஞரும் அதிக கவனம் பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. சில காலத்திற்கு முன்பாக தொழிலதிபரான ரத்தன் டாடாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் ஒரு இளைஞர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு அந்த இளைஞர் குறித்தான் செய்திகள் வெளிவந்தன. அந்த இளைஞரின் பெயர் சாந்தனு என்பதும் அவர் ரத்தன் டாடாவின் மேலாளராக பணியாற்றிவருகிறார் என்ற செய்தியும் பெரும் கவனம் பெற்றது. மேலும் அவர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராகவும் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தற்போது ரத்தன் டாடாவின் மறைவையொட்டி சாந்தனு வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியும் பெரும் கவனம் பெற்றுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு லிங்கிடு-இன் பக்கத்தில் சாந்தனு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே” என பதிவிட்டுள்ளார். இது தற்போது அனைவராலும் கவனிக்கப்படுவருகிறது. தமிழ் செய்திகள் / இந்தியா / Ratan Tata : ரத்தன் டாடாவுடனான நட்பு எப்படிப்பட்டது? - சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு! Ratan Tata : ரத்தன் டாடாவுடனான நட்பு எப்படிப்பட்டது? - சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு! Ratan Tata : டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். படிக்கவும் … 1-MIN READ Tamil Mumbai,Maharashtra Last Updated : October 10, 2024, 9:13 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் நேற்று பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினர். பிறகு இன்று மாலை அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. பல்வேறு தலைவர்கள் ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்திருந்தாலும், ஒரு இளைஞரின் இரங்கல் பெரும் கவனம் பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்பாக அந்த இளைஞரும் அதிக கவனம் பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. விளம்பரம் சில காலத்திற்கு முன்பாக தொழிலதிபரான ரத்தன் டாடாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் ஒரு இளைஞர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு அந்த இளைஞர் குறித்தான் செய்திகள் வெளிவந்தன. அந்த இளைஞரின் பெயர் சாந்தனு என்பதும் அவர் ரத்தன் டாடாவின் மேலாளராக பணியாற்றிவருகிறார் என்ற செய்தியும் பெரும் கவனம் பெற்றது. மேலும் அவர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராகவும் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தற்போது ரத்தன் டாடாவின் மறைவையொட்டி சாந்தனு வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியும் பெரும் கவனம் பெற்றுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு லிங்கிடு-இன் பக்கத்தில் சாந்தனு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே” என பதிவிட்டுள்ளார். இது தற்போது அனைவராலும் கவனிக்கப்படுவருகிறது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Ratan TATA , TATA First Published : October 10, 2024, 9:08 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.