NATIONAL

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜுலை மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை மத்திய அரசு தற்போது அக்டோபர் மாதம் அறிவித்துள்ளது. வருடாவருடம் ஜுலை மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை மத்திய அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (16ஆம் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு பணியாளர்கள் பயனடைவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் டி.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 9,448 கோடி செலவாகும்” என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு தற்போது டி.ஏ. வை சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு மத்திய அரசு ஊழியர் எவ்வளவு சம்பளம் பெறுவார் தெரியுமா? இதையும் படியுங்கள் : ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்ற பின் உமர் அப்துல்லா சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா? ஒருவருக்கு மாதம் சம்பளம் ரூ. 30,000 மற்றும் அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 இருந்தால், அந்த நபருக்கு தற்போது ரூ. 9,000 அகவிலைப்படியாக பெறுவார். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் ஒரு மத்திய அரசு ஊழியர் தனது ஊதியத்தில் மாதம் ரூ.540 வரை கூடுதலாக பெறுவார். தமிழ் செய்திகள் / இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு! மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : October 16, 2024, 5:07 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜுலை மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை மத்திய அரசு தற்போது அக்டோபர் மாதம் அறிவித்துள்ளது. வருடாவருடம் ஜுலை மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை மத்திய அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (16ஆம் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு பணியாளர்கள் பயனடைவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் டி.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 9,448 கோடி செலவாகும்” என்று தெரிவித்துள்ளார். விளம்பரம் மத்திய அரசு தற்போது டி.ஏ. வை சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு மத்திய அரசு ஊழியர் எவ்வளவு சம்பளம் பெறுவார் தெரியுமா? இதையும் படியுங்கள் : ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்ற பின் உமர் அப்துல்லா சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா? ஒருவருக்கு மாதம் சம்பளம் ரூ. 30,000 மற்றும் அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 இருந்தால், அந்த நபருக்கு தற்போது ரூ. 9,000 அகவிலைப்படியாக பெறுவார். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் ஒரு மத்திய அரசு ஊழியர் தனது ஊதியத்தில் மாதம் ரூ.540 வரை கூடுதலாக பெறுவார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: central government , Latest News First Published : October 16, 2024, 5:07 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.