NATIONAL

வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டியில் புது சலுகை! - நேற்று முதல் அமல்

செப்டம்பர் மாதம் 12ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், ஜி.எஸ்.டி. குறித்து பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள கிளைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இது தொடர்பாக விமான நிறுவனங்கள் பல்வேறு விளக்கங்கள் கொடுத்தன. இதனை ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு விமான நிறுவனங்களின் இறக்குமதி ஜி.எஸ்.டி. வரிக்கு விலக்கு அளிக்க குழு பரிந்துரை செய்தது. பிறகு இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தியாவிற்குள் சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கு பொருந்தக்கூடிய ஜி.எஸ்.டி.யை விமான நிறுவனம் ஏற்கனவே செலுத்தியிருந்தால் வெளிநாடுகளில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என குழு முடிவு செய்தது. இதையும் படிங்க : ஏற்றுமதியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு அதன் அடிப்படையில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது நேற்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டியில் புது சலுகை! - நேற்று முதல் அமல் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டியில் புது சலுகை! - நேற்று முதல் அமல் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : October 11, 2024, 7:51 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் செப்டம்பர் மாதம் 12ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், ஜி.எஸ்.டி. குறித்து பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள கிளைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இது தொடர்பாக விமான நிறுவனங்கள் பல்வேறு விளக்கங்கள் கொடுத்தன. இதனை ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு விமான நிறுவனங்களின் இறக்குமதி ஜி.எஸ்.டி. வரிக்கு விலக்கு அளிக்க குழு பரிந்துரை செய்தது. விளம்பரம் இயற்கையாகவே உடலை நச்சு நீக்க உதவும் 8 பழங்கள்.! மேலும் செய்திகள்… பிறகு இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தியாவிற்குள் சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கு பொருந்தக்கூடிய ஜி.எஸ்.டி.யை விமான நிறுவனம் ஏற்கனவே செலுத்தியிருந்தால் வெளிநாடுகளில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என குழு முடிவு செய்தது. இதையும் படிங்க : ஏற்றுமதியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு அதன் அடிப்படையில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது நேற்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: GST , GST council , Latest News First Published : October 11, 2024, 7:51 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.