தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில் இல்லத்தரிசிகளுக்கு சந்தோஷமான விஷயத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பண்டிகையின்போதும், பலகாரம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு பருப்பு உள்ளிட்ட அத்யாவசியப் பொருள்கள் தேவைப்படும். கடந்த சில மாதங்களாக பருப்பு விலை அதிகளவில் இருந்துவரும் நிலையில், தற்போது மத்திய அரசு பருப்பு விலைகளை சில்லறை வர்த்தகத்தில் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே தலைமையில் சில்லறை வர்த்தகர்கள் கூட்டமைப்புடனான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், சில்லறை வர்த்தகத்தில் பருப்பின் விலையை குறைக்க வேண்டும், மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கும் பாரத் பிராண்டு பாசி பருப்பு உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருப்பு வகைகளின் இருப்பு நிலை மற்றும் வலுவான கரீப் பருவ விதைப்பு ஆகியவற்றின் காரணமாக, பருப்பு வகைகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இதையும் படியுங்கள் : சாம்சங் ஊழியர்கள் போராட்டம்! என்ன நடக்கிறது? நீதிமன்றம் சொன்னது என்ன? கடந்த மூன்று மாதங்களில் மட்டும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை மொத்த விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், இவற்றின் சில்லறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. மொத்த விலையில் விலை குறைந்தபோதும், சில்லறையில் விலையை குறைக்காததால் வர்த்தகர்கள் தொடர்ந்து லாபம் பார்த்து வருகின்றனர். எனவே மொத்த விலை குறைந்துள்ளதன் பயனை வர்த்தகர்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், சில்லரை விலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளாத வர்த்தகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமின்றி மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கி வரும் பாரத் பிராண்டு பாசி பருப்பு, மசூர் பருப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / இல்லத்தரிசிகளுக்கு தீபாவளி பரிசு.. மத்திய அரசின் குட் நியூஸ் இல்லத்தரிசிகளுக்கு தீபாவளி பரிசு.. மத்திய அரசின் குட் நியூஸ் பருப்பு விலைகள் மொத்தவிலையில் குறைந்துள்ள நிலையில், அதன் பயணை மக்களுக்கு வழங்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : October 10, 2024, 8:44 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில் இல்லத்தரிசிகளுக்கு சந்தோஷமான விஷயத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பண்டிகையின்போதும், பலகாரம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு பருப்பு உள்ளிட்ட அத்யாவசியப் பொருள்கள் தேவைப்படும். கடந்த சில மாதங்களாக பருப்பு விலை அதிகளவில் இருந்துவரும் நிலையில், தற்போது மத்திய அரசு பருப்பு விலைகளை சில்லறை வர்த்தகத்தில் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே தலைமையில் சில்லறை வர்த்தகர்கள் கூட்டமைப்புடனான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், சில்லறை வர்த்தகத்தில் பருப்பின் விலையை குறைக்க வேண்டும், மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கும் பாரத் பிராண்டு பாசி பருப்பு உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருப்பு வகைகளின் இருப்பு நிலை மற்றும் வலுவான கரீப் பருவ விதைப்பு ஆகியவற்றின் காரணமாக, பருப்பு வகைகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இதையும் படியுங்கள் : சாம்சங் ஊழியர்கள் போராட்டம்! என்ன நடக்கிறது? நீதிமன்றம் சொன்னது என்ன? கடந்த மூன்று மாதங்களில் மட்டும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை மொத்த விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், இவற்றின் சில்லறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. மொத்த விலையில் விலை குறைந்தபோதும், சில்லறையில் விலையை குறைக்காததால் வர்த்தகர்கள் தொடர்ந்து லாபம் பார்த்து வருகின்றனர். விளம்பரம் எனவே மொத்த விலை குறைந்துள்ளதன் பயனை வர்த்தகர்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், சில்லரை விலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளாத வர்த்தகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமின்றி மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கி வரும் பாரத் பிராண்டு பாசி பருப்பு, மசூர் பருப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: diwali 2024 , Latest News First Published : October 10, 2024, 8:44 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவி ஏற்பு... பிரதமர் மோடி பங்கேற்பு!
October 17, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
Ratan Tata: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்!
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
கேரள பாஜகவில் இணைந்த முதல் பெண் ஐ.பி.எஸ்... யார் இந்த ஸ்ரீலேகா?
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை… இணையத்தில் கவனம்பெறும் வீடியோ!
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.