NATIONAL

50 வீடுகளில் திருடிய புறா கொள்ளையன்... போலீசில் சிக்கியது எப்படி? டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ?

புறா திருடன் கர்நாடக மாநிலத்தில் புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். புறாக்கள் கொள்ளைக்கு உதவியது எப்படி? கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.எப்படி? ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து அந்த நபர் திருடிச் செல்கிறார் என்று போலீசார் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நூதன முறையில் சிக்காமல் கொள்ளையடித்து வந்த மஞ்சுநாதன் என்பவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, புறாக்களை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையை அரங்கேற்றி வந்த தகவல் போலீசாரையே சற்று திகைப்படைய வைத்தது. சென்சிடிவ்வான உணர்திறன் கொண்ட புறாக்கள் பொதுவாக அருகில் ஆட்கள் வந்தால் உடனே பறந்து விடும் தன்மை கொண்டது. புறாக்களின் இந்த தன்மையை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்ட மஞ்சுநாதன், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். கொள்ளைக்கு முன் வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் மீது 2 புறாக்களை பறக்க விடுவார். அவை பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து சென்று அமர்ந்து சத்தமிடும். அப்போது வீட்டுக்குள் ஆட்களின் நடமாட்டம் இருந்தால் உடனே பறந்து விடும். அதே நேரம் வீட்டிற்குள் ஆட்கள் இல்லை என்றால் அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருக்கும். இதை வைத்து வீட்டுக்குள் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் மஞ்சுநாதன் தான் கையோடு எடுத்து வரும் இரும்பு ராடைக் கொண்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வெற்றிகரமாக கொள்ளையடித்து வந்துள்ளார். இவ்வாறு, நகரம் முழுவதும் சுமார் 50 வீடுகளில் கொள்ளைடித்து போலீசாரிடம் சிக்காமல் மஞ்சுநாதன் தப்பி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறவைகளை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / 50 வீடுகளில் திருடிய புறா கொள்ளையன்... போலீசில் சிக்கியது எப்படி? டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ? 50 வீடுகளில் திருடிய புறா கொள்ளையன்... போலீசில் சிக்கியது எப்படி? டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ? புறா திருடன் புறாக்களின் அசாத்திய தன்மையை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்ட மஞ்சுநாதன், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Bangalore,Bangalore,Karnataka Last Updated : October 10, 2024, 9:24 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் கர்நாடக மாநிலத்தில் புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். புறாக்கள் கொள்ளைக்கு உதவியது எப்படி? கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.எப்படி? ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து அந்த நபர் திருடிச் செல்கிறார் என்று போலீசார் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நூதன முறையில் சிக்காமல் கொள்ளையடித்து வந்த மஞ்சுநாதன் என்பவரை பிடித்து கைது செய்தனர். விளம்பரம் அவரிடம் விசாரித்த போது, புறாக்களை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையை அரங்கேற்றி வந்த தகவல் போலீசாரையே சற்று திகைப்படைய வைத்தது. சென்சிடிவ்வான உணர்திறன் கொண்ட புறாக்கள் பொதுவாக அருகில் ஆட்கள் வந்தால் உடனே பறந்து விடும் தன்மை கொண்டது. புறாக்களின் இந்த தன்மையை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்ட மஞ்சுநாதன், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். கொள்ளைக்கு முன் வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் மீது 2 புறாக்களை பறக்க விடுவார். அவை பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து சென்று அமர்ந்து சத்தமிடும். அப்போது வீட்டுக்குள் ஆட்களின் நடமாட்டம் இருந்தால் உடனே பறந்து விடும். விளம்பரம் அதே நேரம் வீட்டிற்குள் ஆட்கள் இல்லை என்றால் அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருக்கும். இதை வைத்து வீட்டுக்குள் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் மஞ்சுநாதன் தான் கையோடு எடுத்து வரும் இரும்பு ராடைக் கொண்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வெற்றிகரமாக கொள்ளையடித்து வந்துள்ளார். இதையும் படிங்க: டெலிகிராம் ஆப் மூலம் சிறார் ஆபாச படங்கள் விற்பனை… இளைஞரை கைது செய்தது சைபர் கிரைம் போலீஸ்! இவ்வாறு, நகரம் முழுவதும் சுமார் 50 வீடுகளில் கொள்ளைடித்து போலீசாரிடம் சிக்காமல் மஞ்சுநாதன் தப்பி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறவைகளை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Crime News , Latest News , Tamilnadu First Published : October 10, 2024, 9:24 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.