இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தபிறகு ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஹரியானாவில் பா.ஜ.க.வும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஆட்சியை அமைத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், இந்த இரு சட்டமன்றத் தேர்தல் மீதும் மக்களுக்கு அதீத ஆர்வம் இருந்தது. தற்போது இந்தத் தேர்தல் முடிவினைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இரு முக்கிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20ம் தேதியும் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றம் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இரு மாநிலத்திலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் ஏக்னாத்ஷிண்டே பிரிவு, பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் பிரிவு ஆகியவை சேர்ந்து மகாயுதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில் மகாயுதி கூட்டணி ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளின் பட்டியலை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் , அஜித் பவார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதையும் படியுங்கள் : பேஜர்களை போல இ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியுமா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்கள் கூட்டணியின் திட்டங்கள் உதவியதாக குறிப்பிட்டார். விரைவில் வெளியிடப்பட இருக்கும் தேர்தல் அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் கூறினார். தமிழ் செய்திகள் / இந்தியா / மகாராஷ்டிராவில் சூடு பிடிக்க துவங்கிய அரசியல் களம்.. விரைவில் வெளியாகும் தேர்தல் அறிக்கை! மகாராஷ்டிராவில் சூடு பிடிக்க துவங்கிய அரசியல் களம்.. விரைவில் வெளியாகும் தேர்தல் அறிக்கை! மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் ஆட்சிகாலத்தில் செய்த சாதனை பட்டியலை ஆளும் மஹாயுதி கூட்டணி வெளியிட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Maharashtra Last Updated : October 16, 2024, 6:43 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தபிறகு ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஹரியானாவில் பா.ஜ.க.வும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஆட்சியை அமைத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், இந்த இரு சட்டமன்றத் தேர்தல் மீதும் மக்களுக்கு அதீத ஆர்வம் இருந்தது. தற்போது இந்தத் தேர்தல் முடிவினைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இரு முக்கிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20ம் தேதியும் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றம் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இரு மாநிலத்திலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் ஏக்னாத்ஷிண்டே பிரிவு, பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் பிரிவு ஆகியவை சேர்ந்து மகாயுதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. விளம்பரம் இந்நிலையில் மகாயுதி கூட்டணி ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளின் பட்டியலை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் , அஜித் பவார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதையும் படியுங்கள் : பேஜர்களை போல இ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியுமா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்கள் கூட்டணியின் திட்டங்கள் உதவியதாக குறிப்பிட்டார். விரைவில் வெளியிடப்பட இருக்கும் தேர்தல் அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் கூறினார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Maharashtra First Published : October 16, 2024, 6:43 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவி ஏற்பு... பிரதமர் மோடி பங்கேற்பு!
October 17, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
Ratan Tata: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்!
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
கேரள பாஜகவில் இணைந்த முதல் பெண் ஐ.பி.எஸ்... யார் இந்த ஸ்ரீலேகா?
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை… இணையத்தில் கவனம்பெறும் வீடியோ!
NATIONAL
- by Sarkai Info
- October 10, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.