LIVE-UPDATES

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்களும் உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன், சிஎஸ்கே அணியின் மஞ்சள் வண்ணத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசியதுடன், வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளளார். இதனால், தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இன்று(ஜன.18) அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கோபி கிருஷ்ணனின் சடலம் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய ராமநத்தம் போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று(ஜன.17) இரவு அரங்கூர் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று அதிகாலை கோபி கிருஷ்ணனின் உடல் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபி கிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முகப்பு / Breaking and Live Updates / வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்.. கடலூரில் பரபரப்பு சம்பவம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்.. கடலூரில் பரபரப்பு சம்பவம் பொங்கலையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது தகராறு ஏற்பட்டதால் சிலர் கோபி கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Cuddalore,Cuddalore,Tamil Nadu Last Updated : January 18, 2024, 2:00 pm IST Follow us on Published By : alaguvel pandian தொடர்புடைய செய்திகள் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்களும் உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன், சிஎஸ்கே அணியின் மஞ்சள் வண்ணத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசியதுடன், வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளளார். இதனால், தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது. விளம்பரம் இந்நிலையில் இன்று(ஜன.18) அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கோபி கிருஷ்ணனின் சடலம் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய ராமநத்தம் போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று(ஜன.17) இரவு அரங்கூர் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. விளம்பரம் இதையடுத்து, இன்று அதிகாலை கோபி கிருஷ்ணனின் உடல் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபி கிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: MS Dhoni , sucide First Published : January 18, 2024, 2:00 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.