LIVE-UPDATES

நகைச் சீட்டு எனக் கூறி ரூ.10 கோடி மோசடி... நூதன முறையில் போராட்டம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தங்க நகை சீட்டு எனக் கூறி சுமார் ரூ.10 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக போஸ்டர் அடித்து ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டி தெருவில் அருள் - சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் ஆசிரியராக அருள் பணியாற்றி வந்த நிலையில், இந்த தம்பதி நிதிநிறுவனம் ஒன்றையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். மாதாந்திர ஏலச்சீட்டு, தள்ளு சீட்டு, குலுக்கல் சீட்டு என ஆரம்பித்து பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி ரூ.1,000 செலுத்தினால் தங்க நகை அளிக்கப்படும் என ஆசை வார்த்தைக் கூறி புதிதாக ஒரு சீட்டு திட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக நடத்தி வந்த இந்த தங்க நகைத் திட்டத்தில் ஒரு குழுவுக்கு 100 பேர் என 30 குழுக்கள் சேர்க்கப்பட்டு சுமார் 3,000 பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ரூ.10 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதிர்வு காலம் கடந்த நிலையில், பணத்தையும், அவர்கள் உறுதி அளித்த தங்கத்தையும் கேட்ட போதுதான் அருள் - சிவசங்கரி தம்பதி தங்கள் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர். பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்த அவர்கள், அதன் பின் தங்களிடம் பணம்கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், இதுகுறித்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி காஞ்சிபுரத்தின் முக்கிய நகர் பகுதிகளான, காந்தி சாலை, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுழைவு வாயில் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த போஸ்டரில், பணத்தை மோசடி செய்த அருள் மற்றும் சிவசங்கரி தம்பதியின் புகைப்படத்தை அச்சிட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போஸ்டருடன் சென்று புகார் மனு அளித்தனர். பணமோசடி செய்த நபர்களின் புகைப்படத்தை போஸ்டராக ஒட்டி பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.