LIVE-UPDATES

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அரையாண்டுத் தேர்வு

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பால், கல்வி நிலையங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே மழை வெள்ளத்தில் புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கல்வி நிலையங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், ஏராளமான மாணவர்களின் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 12,000 மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்தனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 8,000 பேர் என ஒட்டுமொத்தமாக 20,000 மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுவது கண்டறியப்பட்டது. இதற்காக, சேலம், தருமபுரி, திருச்சி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 95,000 மேற்பட்ட புத்தகங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை சென்னை மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களிடம், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர். அவை, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி, ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. முகப்பு / Breaking and Live Updates / மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் தொடக்கம் மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் தொடக்கம் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil Nadu Last Updated : December 13, 2023, 7:25 am IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பால், கல்வி நிலையங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே மழை வெள்ளத்தில் புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கல்வி நிலையங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், ஏராளமான மாணவர்களின் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளம்பரம் Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 12,000 மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்தனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 8,000 பேர் என ஒட்டுமொத்தமாக 20,000 மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுவது கண்டறியப்பட்டது. இதற்காக, சேலம், தருமபுரி, திருச்சி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 95,000 மேற்பட்ட புத்தகங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை சென்னை மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களிடம், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர். அவை, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி, ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Exam , half yearly examination , tamilnadu First Published : December 13, 2023, 7:25 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.