LIVE-UPDATES

மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி விருப்ப மனு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி விருப்ப மனு அளித்தார். தமிழ்நாட்டின் 36ஆவது பாராளுமன்ற தொகுதியாக உள்ள தூத்துக்குடி தொகுதியில் தூத்துக்குடி, திருசெந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 14,48,179 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதுவரை 3 நாடாளுமன்றத் தேர்தல்களை கண்ட இந்த தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, 5.63 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 2.15 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். 3.47 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றியை தன் வசப்படுத்தினார். இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுயில் போட்டியிட எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து, மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. கனிமொழி எம்.பி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோன்று கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 51 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கனிமொழிக்கு போட்டியாக திமுகவில் இதுவரை யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. விருப்ப மனு அளித்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி எம்.பி வாழ்த்து பெற்றார். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் கனிமொழி விருப்ப மனு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் கனிமொழி விருப்ப மனு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி விருப்ப மனு அளித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : March 5, 2024, 3:33 pm IST Follow us on Published By : Lakshmanan G Written By : surya தொடர்புடைய செய்திகள் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி விருப்ப மனு அளித்தார். தமிழ்நாட்டின் 36ஆவது பாராளுமன்ற தொகுதியாக உள்ள தூத்துக்குடி தொகுதியில் தூத்துக்குடி, திருசெந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 14,48,179 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதுவரை 3 நாடாளுமன்றத் தேர்தல்களை கண்ட இந்த தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, 5.63 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 2.15 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். 3.47 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றியை தன் வசப்படுத்தினார். விளம்பரம் இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுயில் போட்டியிட எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து, மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. கனிமொழி எம்.பி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோன்று கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 51 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. விளம்பரம் கனிமொழிக்கு போட்டியாக திமுகவில் இதுவரை யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. விருப்ப மனு அளித்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி எம்.பி வாழ்த்து பெற்றார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: DMK , Kanimozhi , Lok Sabha Election 2024 , Parliament Election 2024 First Published : March 5, 2024, 3:33 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.