LIVE-UPDATES

அரசு மருத்துவர் இறந்தால் வாரிசுக்கு அரசு பணி - நிபந்தனை என்ன?

பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி பணி வழங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு உதவி தொகை, அரசு மருத்துவர்களுக்கான பங்களிப்புடன் கூடிய சேம நல நிதி வழங்கப்படுவதாக கூறினார். தொகுப்பு நிதி என்பது 50 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். முன்னதாக 2,000 மருத்துவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது 11,000 மருத்துவர்கள் விருப்பத்தின் பெரில் மாதம் தோறும் தங்களுடைய ஊதியத்தில் இருந்து 500 ரூபாய் பிடித்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்து இணையத்தில் பதிவு செய்திருப்பதாக கூறினார். இது அரசு மருத்துவர்களுக்கு ஒரு பாதுகாப்பான திட்டம் என்றும் தெரிவித்தார். அரசு மருத்துவர்கள் பணியின் போது உயிரிழந்ததால் அவர்களது வாரிசுகளுக்கு மருத்துவத்துறையில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் பணியின் போது உயிரிழந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவித்தார். முகப்பு / Breaking and Live Updates / பணியின்போது அரசு மருத்துவர் இறந்தால் வாரிசுக்கு அரசு பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியின்போது அரசு மருத்துவர் இறந்தால் வாரிசுக்கு அரசு பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி பணி வழங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : February 27, 2024, 9:17 pm IST Follow us on Published By : Praveenkumar PJ தொடர்புடைய செய்திகள் பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி பணி வழங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு உதவி தொகை, அரசு மருத்துவர்களுக்கான பங்களிப்புடன் கூடிய சேம நல நிதி வழங்கப்படுவதாக கூறினார். ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவும் 9 சூப்பர்ஃபுட்கள்.! மேலும் செய்திகள்… தொகுப்பு நிதி என்பது 50 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். முன்னதாக 2,000 மருத்துவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது 11,000 மருத்துவர்கள் விருப்பத்தின் பெரில் மாதம் தோறும் தங்களுடைய ஊதியத்தில் இருந்து 500 ரூபாய் பிடித்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்து இணையத்தில் பதிவு செய்திருப்பதாக கூறினார். இது அரசு மருத்துவர்களுக்கு ஒரு பாதுகாப்பான திட்டம் என்றும் தெரிவித்தார். விளம்பரம் அரசு மருத்துவர்கள் பணியின் போது உயிரிழந்ததால் அவர்களது வாரிசுகளுக்கு மருத்துவத்துறையில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் பணியின் போது உயிரிழந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவித்தார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Death , government doctors , Ma subramanian , male heir , Tamil Nadu Government Jobs First Published : February 27, 2024, 9:17 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.