துபாயில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்திய பெண் ஒருவர் தனது அறையின் பால்கனியில் துணிகளை காய வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் யூசரான பல்லவி வெங்கடேஷ் என்பவர் விடுமுறைக்காக துபாயில் உள்ள அட்லாண்டிஸ், தி பாம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்லவி வெங்கடேஷ் என்ற யூசர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். துபாயில் உள்ள அட்லாண்டிஸ், தி பாம் நட்சத்திர விடுதியின் பால்கனியில் தனது தாயார் துணிகளை உலர வைக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “பாம் அட்லாண்டிஸ் விடுதியில் அம்மா தனது வழக்கமான வேலைகளைச் செய்கிறார்” என்று தலைப்புடன் இந்த வீடியோவானது பகிரப்பட்டது. இந்த வீடியோவானது 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது மற்றும் லட்சக்கணக்கானவர்களின் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோ குறித்து அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் பதிவில், “உங்கள் அம்மா தனது வழக்கமான வேலைகளைச் செய்கிறார், ஆனால் ஒவ்வொரு குளியலறையிலும் துணிகளை காய வைக்க தனியாக ஒரு கருவியை நாங்கள் பொருத்தியுள்ளோம், அதில் நீங்கள் உங்கள் துணிகளை காய வைக்கலாம்” என்று பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்திற்கு பல்லவி வெங்கடேஷ் பதிலும் அளித்திருந்தார். அதில், “நாங்கள் ஹோட்டல் ரூமை ஒரு மணி நேரத்தில் காலி செய்ய வேண்டி இருந்தது. எனவே அந்த கருவியில் ஆடைகளை காய வைக்க போதுமான நேரம் எங்களுக்கு இல்லை. மேலும், துபாய் வெப்பத்திற்கு10 நிமிடங்களில் துணிகள் காய்ந்துவிடும் என்பதால், எனது தாயார் இந்த செயலை செய்தார்” என்று பதிலளித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட இந்த வீடியோ குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும், மற்றொரு சிலர் அந்த பெண்ணுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு யூசர் கூறியதாவது, “இதை மற்ற நாடுகளில் மோசமான நடத்தையாகவே கருதுவார்கள், எனவே நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் விதிகளை பின்பற்றவும்” என்று கூறியுள்ளார். இதையும் படிக்க: கடலில் சிறுநீர் கழித்தால் ரூ.67,000 வரை அபராதம்… எங்கு தெரியுமா? மற்றொரு நபர், “அந்த ஹோட்டலில் நீங்கள் தங்கும் அளவுக்குப் பணக்காரராக இருக்கும்போது, மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்துக் கவலைப்படக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் “அம்மாக்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் சில விஷயங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், “இதைச் செய்வது சட்டவிரோதமானது; இதற்காக அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார். None
Popular Tags:
Share This Post:
ஒரே நேரத்தில் 38 நாய்களை நடைபயிற்சிக்கு கூட்டிச் சென்ற நபர்! - எதற்காக தெரியுமா?
October 21, 2024ரத்தன் டாடா உருவத்தை மார்பில் டாட்டூ குத்திக் கொண்ட நபர்...!! நெகிழ வைக்கும் காரணம்...
October 17, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 15, 2024
-
- October 11, 2024
-
- October 10, 2024
நாய்கள், பூனைகளை அரவணைக்கும் கூலி தொழிலாளிக்கு குவிந்த நிதி உதவி!
- By Sarkai Info
- October 9, 2024
திருமண கோலத்தில் லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன்..இணையத்தில் வைரல்!
- By Sarkai Info
- October 9, 2024
Featured News
Latest From This Week
மோமோஸ்" பெயரில் டெல்லி தெருவோர வியாபாரியின் செயல்!... திகைத்த நெட்டிசன்ஸ்
TREND
- by Sarkai Info
- October 8, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.