மாடல் சாய் வாலி ‘மாடல் சாய் வாலி’ என்ற சிம்ரன் குப்தாவின் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. வைரலான நான்கு நாட்களில் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஃபுட் பிளாக்கிங் சேனலான தி ஹங்கிரி பஞ்சாபி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது, இதில் அழகுப் போட்டியின் வெற்றியாளர் சிம்ரன் குப்தா தனது டீ ஸ்டாலில் டீ போடுவதை காட்டுகிறது. டீ விற்பனையை ஒரு நவநாகரீக தொழிலாக மாற்றிய சிறு தொழில்முனைவோரில் டோலி சாய் வாலாவும் ஒருவர். பில் கேட்ஸ் பாராட்டிய நாக்பூர் டோலி சாய் வாலா பற்றிய பல செய்திகள் வைரலாகி வருகின்றன. அவர் டீ தயாரிக்கும் விதம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. இவர் டீ கடை நடத்தும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வைரலாகி வருகிறது. மாடல் சாய் வாலி: மாடல் சாய் வாலியின் உண்மையான பெயர் சிம்ரன் குப்தா ஆகும். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசிப்பவர் சிம்ரன் குப்தா. இவர் 2018 இல் மிஸ் கோரக்பூர் பட்டத்தை வென்று மாடலிங் உலகில் நிலைத்து நின்றார். இது குறித்து சாய் வாலி கூறியதாவது, மிஸ் கோரக்பூர் ஆன பிறகு, எனது மன உறுதி மிகவும் அதிகரித்தது. அதன் பிறகு, நான் டெல்லிக்குச் சென்றேன், எனக்கு மாடலிங் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சில விளம்பரங்களிலும் நடித்தேன், எனது தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த நேரத்தில் கோவிட் வந்தது மற்றும் லாக்டவுன் காரணமாக ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டபோது, எனது தொழிலும் பாதிக்கப்பட்டது. உணவுக்கு வழியில்லாமல், வேலையும் இல்லாமல் திண்டாடி வந்த அவர் தனது சொந்த ஊரான கோரக்பூருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என்று கூறினார். இந்த இக்கட்டான நேரத்தில் லக்னோவில் சொந்தமாக டீக்கடை தொடங்க முடிவு செய்தார். டீ விற்பனையை நாகரீகமான தொழிலாக மாற்றிய பாட்னாவைச் சேர்ந்த எம்பிஏ சாய்வாலா பிரஃபுல்லா பில்லோர் மற்றும் பட்டதாரி சாய்வாலா பிரியங்கா குப்தா ஆகியோரால் ஈர்க்கப்பட்ட அவர் சாலையோரத்தில் ஒரு சிறிய தள்ளுவண்டி டீக் கடையை திறந்தார். மாடல் சாய்வாலி தனது தேநீர் கடைகளுக்கு மட்டுமல்ல, அவரது நாகரீகமான தோற்றத்திற்கும், அழகுக்கும் பெயர் பெற்றவர். வீடியோவில், அவர் தனது டீக்கடையில் டீ போடும் போது மாடலாக போஸ் கொடுத்து வாடிக்கையாளர்களுடன் உரையாடுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 10,000க்கும் மேற்பட்ட கருத்துகளை குவித்துள்ளது. சொந்தமாக சம்பாதிக்கும் இளம் தொழில்முனைவோரை பலர் பாராட்டினாலும், மற்றவர்கள் தலைமுடியை காட்டிக்கொள்ளாமலும், கையுறைகள் இல்லாமலும் உணவுப் பொருட்களைத் தொடுவதற்காக அவரை விமர்சிக்கின்றனர். Also read | நடனமாடிக் கொண்டிருந்தபோது “கர்பா கிங்”-ற்கு நடந்த சோகம்!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ இது குறித்து யூசர் ஒருவர் கூறியதாவது, தலைமுடியை கட்டிக்கொள்ளாமலும், கையுறைகள் இல்லாமலும் இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை, ஏனெனில் அவர் தொடர்ந்து தன் தலைமுடியைத் தொட்டு, பிறகு உணவையும் தொடுகிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர் கூறியதாவது, டீயுடன் முடி இலவசம் என்று கூறியுள்ளார். மற்றவர்கள் இனி வரும் நாட்களில் தலைமுடியை கட்டி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். None
Popular Tags:
Share This Post:
ஒரே நேரத்தில் 38 நாய்களை நடைபயிற்சிக்கு கூட்டிச் சென்ற நபர்! - எதற்காக தெரியுமா?
October 21, 2024ரத்தன் டாடா உருவத்தை மார்பில் டாட்டூ குத்திக் கொண்ட நபர்...!! நெகிழ வைக்கும் காரணம்...
October 17, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 15, 2024
-
- October 11, 2024
-
- October 10, 2024
நாய்கள், பூனைகளை அரவணைக்கும் கூலி தொழிலாளிக்கு குவிந்த நிதி உதவி!
- By Sarkai Info
- October 9, 2024
திருமண கோலத்தில் லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன்..இணையத்தில் வைரல்!
- By Sarkai Info
- October 9, 2024
Featured News
Latest From This Week
மோமோஸ்" பெயரில் டெல்லி தெருவோர வியாபாரியின் செயல்!... திகைத்த நெட்டிசன்ஸ்
TREND
- by Sarkai Info
- October 8, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.