TREND

வெறும் கைகளால் பாம்பை மீட்ட இளைஞர்... மனதை பதறவைக்கும் வீடியோ

பெரும்பாலான மக்கள் பாம்புகளை மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதுகின்றனர். பாம்பு கடித்தால், உயிர் பிழைப்பது மிகவும் கடினம், எனவே பாம்பு இருப்பது தெரிந்தால் அந்த இடத்திற்கு செல்லக்கூட பயந்து நடுங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரே பாம்புகளை சமாளிக்கத் துணிவார்கள். இதுபோன்ற ஒரு நபர், சமீபத்தில் எந்தவித பயமின்றி தனது வெறும் கைகளால் பாம்பை பிடித்துள்ளார், அவரது வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. நர்பட் நாயக் என்ற விலங்கு மீட்பு சேவையைச் சேர்ந்த நபர், ஒரு கருவியின் உதவியுடன் சாலையின் அருகே உள்ள வாய்க்காலை திறப்பதை வீடியோ காட்டுகிறது. வாய்க்காலை திறந்தவுடன் அதில் பாம்பு ஒன்று இருந்ததையும் வீடியோவில் காணலாம். இதனையடுத்து எந்தவித பயமும் இன்றி, நர்பட் பின்னர் ஒரு கருவி மூலம் பாம்பை வாய்க்காலில் இருந்து பத்திரமாக எடுக்கிறார். பாம்பின் உடலைக் கட்டுப்படுத்த கருவியைப் பயன்படுத்தி திறமையாக பாம்பை கையாளுகிறார். பின்னர் அவர் பாம்பை நிலத்தில் விட்டு தனது வெறும் கைகளால் பாம்பின் தலையை அழுத்திப் பிடிக்கிறார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை நர்பட் நாயக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டதையடுத்து இந்த வீடியோ வைரலாகி 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர் மற்றும் அத்தகைய துணிச்சலான செயலை செய்த அவரது தைரியத்தைப் பாராட்டியுள்ளனர். இருப்பினும், சில நெட்டிசன்கள், பாம்புகளை பிடிக்கும்போது கையுறைகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் கூறியதாவது, இதுபோன்ற செயல்களை செய்யும்போது பயப்படவில்லையா என்று நர்பத் நாயக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நர்பட் நாயக் என்பவர் பாம்புகளை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இதுபோன்ற வீடீயோக்களால் நிரம்பியுள்ளது, அதில் ஒரு வீடியோவில், அவர் கற்களுக்குள் மறைந்திருக்கும் பாம்பை மீட்க, ஒவ்வொரு கற்களை அகற்றத் தொடங்குகிறார். அது இரவு நேரம் என்பதால், அருகில் உள்ளவர்கள் மொபைல் டார்ச்களை பயன்படுத்தி நர்பட் நாயக்கின் பாம்பு மீட்புப் பணிக்கு உதவினர். சிறிது வினாடிகளுக்குப் பிறகு, பாம்பு கற்களுக்கு இடையில் இருந்து வெளிவர தொடங்கியது. இதையும் படிக்க: திருமண கோலத்தில் லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன்..இணையத்தில் வைரல்! இதனையடுத்து நர்பட் நாயக் விரைவாக செயல்பட்டு பாம்பை தப்பி ஓடாமல் பிடித்தார். இதற்கிடையில் பாம்பை பார்த்ததும் மக்கள், சம்பவ இடத்திலிருந்து ஓடி கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் செல்போன் டார்ச்கள் இல்லாததால் பாம்பு மீட்பவருக்கு சிக்கல் ஏற்பட்டது. பிறகு அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து பாதுகாப்பான இடத்தில் விட்டார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.