இந்திய போக்குவரத்து அமைப்புகளில் ரயில் சேவை முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக மும்பை புறநகர் ரயில்வேக்கு சிறப்பான இடமுண்டு. இதனை மராத்தியில் மும்பை உபனகாரியா இரயில்வே என்றும் அழைக்கிறார்கள். இது மிகப்பெரிய மும்பை பெருநகரப் பகுதிக்கு சேவை செய்யும் ஒரு முக்கியமான ரயில் அமைப்பாகும். இரண்டு இந்திய ரயில்வே மண்டலங்களான மேற்கு ரயில்வே (WR) மற்றும் மத்திய இரயில்வே (CR) மூலம் இது இயக்கப்படுகிறது. இது உலகளவில் மிகவும் பரபரப்பான நகர்ப்புற ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகவும் உள்ளது. இதன் மூலம் தினசரி 7.24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். 465 கிலோ மீட்டர்கள் நீளமுள்ள இந்த ரயில்வே அமைப்பு, மேல்நிலை லைன்களில் இருந்து 1500 V DC அல்லது 25000 V AC மின்சாரம் மூலம் இயங்குகிறது. புறநகர் சேவைகள் 9-பெட்டி, 12-பெட்டி மற்றும் 15-பெட்டி என 191 ரயில் பெட்டிகளுடன் (ரேக்குகள்) மின்சாரத்தில் (EMUs) இயக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மொத்தம் 2,342 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 6.94 மில்லியன் பயணிகளை கொண்டு செல்கிறது. மும்பையின் மக்கள்தொகை மற்றும் அதன் வணிக மையங்களின் பரவலான தன்மை காரணமாக, புறநகர் இரயில்வே, நகரின் முதன்மையான மக்கள் போக்குவரத்து அமைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், மும்பையில் பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக, தினமும் ரயில் பயணம் என்பது நெரிசல் மிகுந்த பிரச்சனையாக மாறியுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்து வருவதால் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை தணிக்கவும், பயண நிலைமைகளை மேம்படுத்தவும், புறநகர் ரயில்வே அமைப்பில் உள்ள கூட்ட நெரிசலைக் குறைக்கவும் மும்பை நகரத்தில் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் நெட்வொர்க்குகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் எப்போதும் லோக்கல் ரயில்களில் மிகவும் கூட்டமாக இருப்பதைக் காணலாம். இதையும் படிக்க: இந்தியாவில் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு ரூபாய் செலவாகும் தெரியுமா..? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..! இந்திய ரயில்வேயுடன் இணைந்து, மும்பை புறநகர் ரயில்வேயும் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் ரயில்வே ஆகும். இதன் மூலம் ஆசியாவிலேயே மிகப் பழமையான ரயில் அமைப்பாக திகழ்கிறது. இங்கிருந்து முதல் ரயில் பயணம் ஏப்ரல் 16, 1853 அன்று மாலை 3:35 மணிக்கு போரி பந்தர் (தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) மற்றும் தானே இடையே 34 கிமீ தூரத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இதையும் படிக்க: Ratan Tata | “உன் மீது எறியப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்; அதைக்கொண்டு அற்புதங்களை கட்டி எழுப்பு” - ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்! 14 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் 57 நிமிடங்களில் பயணத்தை முடித்தது. பயணத்தின் இடையே சியோனில் சிறிது நேரம் நின்று தண்ணீரை நிரப்பியது. 1991 முதல், இந்த ரயில்வே அமைப்பு குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பம்பாய் ரயில்வே வரலாற்றுக் குழு இந்த வரலாற்றுப் பாதையின் வளமான பாரம்பரியத்தை சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது. None
Popular Tags:
Share This Post:
ஒரே நேரத்தில் 38 நாய்களை நடைபயிற்சிக்கு கூட்டிச் சென்ற நபர்! - எதற்காக தெரியுமா?
October 21, 2024ரத்தன் டாடா உருவத்தை மார்பில் டாட்டூ குத்திக் கொண்ட நபர்...!! நெகிழ வைக்கும் காரணம்...
October 17, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 15, 2024
-
- October 11, 2024
-
- October 10, 2024
நாய்கள், பூனைகளை அரவணைக்கும் கூலி தொழிலாளிக்கு குவிந்த நிதி உதவி!
- By Sarkai Info
- October 9, 2024
திருமண கோலத்தில் லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன்..இணையத்தில் வைரல்!
- By Sarkai Info
- October 9, 2024
Featured News
Latest From This Week
மோமோஸ்" பெயரில் டெல்லி தெருவோர வியாபாரியின் செயல்!... திகைத்த நெட்டிசன்ஸ்
TREND
- by Sarkai Info
- October 8, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.