ரிலையன்ஸ் அறக்கட்டளை 2024 – 25 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வரவேற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது. மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை அவர்களது கல்விக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு தகுதி பெறுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கி அவர்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. 5000 இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரையிலும் ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி தொகையாக வழங்குகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்திய மறைந்த திருபாய் அம்பானியின் 90-ஆவது பிறந்தநாள் 2022 டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அடுத்த 10 ஆண்டுகளில் 50,000 மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது வரை 23 ஆயிரம் மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை வழங்கி உள்ளது, இதனை பெற விரும்புவோர் என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ் செய்திகள் / கல்வி / மாணவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கல்வி உதவித் தொகை... ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு! மாணவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கல்வி உதவித் தொகை... ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு! ரிலையன்ஸ் அறக்கட்டளை விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 14, 2024, 7:51 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வரவேற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது. மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை அவர்களது கல்விக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. விளம்பரம் இந்தியாவில் உள்ள இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு தகுதி பெறுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கி அவர்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. 5000 இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரையிலும் ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி தொகையாக வழங்குகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்திய மறைந்த திருபாய் அம்பானியின் 90-ஆவது பிறந்தநாள் 2022 டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. விளம்பரம் அப்போது பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அடுத்த 10 ஆண்டுகளில் 50,000 மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையும் படிங்க - நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு : சென்னை ஐஐடி முதலிடம்! தற்போது வரை 23 ஆயிரம் மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை வழங்கி உள்ளது, இதனை பெற விரும்புவோர் என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: mukesh ambani , Reliance Foundation , Scholarship , student First Published : August 14, 2024, 7:51 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
"ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...
October 10, 2024முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்...
October 9, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 16, 2024
-
- August 16, 2024
-
- August 14, 2024
Featured News
Latest From This Week
இஸ்ரோ நடத்தும் வினாடி வினா போட்டி... 3 மாவட்ட மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு...
EDUCATION
- by Sarkai Info
- July 11, 2024
ஆசிரியர்கள் பணியிட மாற்றம்... பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...
EDUCATION
- by Sarkai Info
- July 11, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.