EDUCATION

தேர்வில் குளறுபடி : யுபிஎஸ்சி தேர்வு போல நீட் தேர்வு நடைமுறையை மாற்ற மத்திய அரசு திட்டம்?

நீட் யுபிஎஸ்சி தேர்வை 3 நிலைகளாக நடத்தப்படுவது போல், நீட் தேர்வை 2 நிலைகளாக நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை அடுத்து தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, தேசிய தேர்வு முகமையை மேம்படுத்துவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்து தேர்வு முறைக்கு பதிலாக கணினி முறை தேர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்வை முதல்நிலைத் தேர்வு, இறுதித் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. முதல் நிலைத் தேர்வை எழுத்துத் தேர்வாகவும், இறுதி தேர்வை கணினி முறையிலும் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் மோசடியை அரங்கேற்றினால், இறுதி தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அம்சமாக, முதல்நிலை மற்றும் இறுதி தேர்வுகளுக்கு தனித்தனி ஏஜென்சிகளை ஈடுபடுத்தலாம் என கூறப்படுகிறது. இதையும் படிங்க: 2024 பட்ஜெட்: மோடி 3.O அரசில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? எகிறும் எதிர்பார்ப்பு! முதல்நிலைத் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துவதுடன், இறுதி தேர்வு நடத்தும் உரிமையை தேசிய தேர்வு வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், AIIMS ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிடம் ஒப்படைக்க முடியுமா? எனவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ் செய்திகள் / கல்வி / தேர்வில் குளறுபடி : யுபிஎஸ்சி தேர்வு போல நீட் தேர்வு நடைமுறையை மாற்ற மத்திய அரசு திட்டம்? தேர்வில் குளறுபடி : யுபிஎஸ்சி தேர்வு போல நீட் தேர்வு நடைமுறையை மாற்ற மத்திய அரசு திட்டம்? நீட் நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை அடுத்து தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Cantonment,New Delhi,Delhi Last Updated : July 20, 2024, 4:42 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் யுபிஎஸ்சி தேர்வை 3 நிலைகளாக நடத்தப்படுவது போல், நீட் தேர்வை 2 நிலைகளாக நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை அடுத்து தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, தேசிய தேர்வு முகமையை மேம்படுத்துவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்து தேர்வு முறைக்கு பதிலாக கணினி முறை தேர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. விளம்பரம் இந்நிலையில், இளநிலை நீட் தேர்வை முதல்நிலைத் தேர்வு, இறுதித் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. முதல் நிலைத் தேர்வை எழுத்துத் தேர்வாகவும், இறுதி தேர்வை கணினி முறையிலும் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் மோசடியை அரங்கேற்றினால், இறுதி தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அம்சமாக, முதல்நிலை மற்றும் இறுதி தேர்வுகளுக்கு தனித்தனி ஏஜென்சிகளை ஈடுபடுத்தலாம் என கூறப்படுகிறது. விளம்பரம் இதையும் படிங்க: 2024 பட்ஜெட்: மோடி 3.O அரசில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? எகிறும் எதிர்பார்ப்பு! முதல்நிலைத் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துவதுடன், இறுதி தேர்வு நடத்தும் உரிமையை தேசிய தேர்வு வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், AIIMS ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிடம் ஒப்படைக்க முடியுமா? எனவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Neet Exam , UPSC First Published : July 20, 2024, 4:42 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.