EDUCATION

CUET 2024 : சியுஇடி நுழைவு தேர்வின் மறுதேர்வு தேதி அறிவிப்பு

இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மறுதேர்வு ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சியுஇடி(CUET) தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வருகின்றது. இதனிடையே, தேர்வில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சரியான விளக்கத்துடன் புகாரளிக்கும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தது. இதையடுத்து, வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாக தேசியத் தேர்வு முகமையான என்டிஏ அறிவிக்கை வெளியிட்டது. மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழிக்குப் பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக என்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீட் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒயாசிஸ் பள்ளி சிக்கியது. இந்நிலையில், அங்கு சியுஇடி-யுஜி தேர்வெழுதிய 250 மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சியுஇடி- இளநிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடாதது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ் செய்திகள் / கல்வி / CUET 2024 : சியுஇடி நுழைவு தேர்வின் மறுதேர்வு தேதி அறிவிப்பு CUET 2024 : சியுஇடி நுழைவு தேர்வின் மறுதேர்வு தேதி அறிவிப்பு CUET UG 2024 : ஜூலை 19ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாக தேசியத் தேர்வு முகமையான என்டிஏ அறிவிக்கை வெளியிட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 15, 2024, 9:02 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மறுதேர்வு ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சியுஇடி(CUET) தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வருகின்றது. இதனிடையே, தேர்வில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சரியான விளக்கத்துடன் புகாரளிக்கும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தது. இதையடுத்து, வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாக தேசியத் தேர்வு முகமையான என்டிஏ அறிவிக்கை வெளியிட்டது. மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழிக்குப் பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக என்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விளம்பரம் நீட் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒயாசிஸ் பள்ளி சிக்கியது. இந்நிலையில், அங்கு சியுஇடி-யுஜி தேர்வெழுதிய 250 மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சியுஇடி- இளநிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடாதது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: CUET Exam First Published : July 15, 2024, 9:02 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.