பிக்பாஸ் தமிழின் 8-வது சீசனில் முதல் வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நேற்று நடந்தது. இதில், 6 பேர் இடம்பெற்று உள்ளனர். பிக்பாஸ் தமிழின் 8-வது சீசன் அமர்களமாக ஆரம்பமாகி உள்ளது. கமல்ஹாசனுக்கு பதில் இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி தனது முதல் எபிசோடிலேயே மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். மேலும், ‘இம்முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு’ என சொன்னதுக்கு ஏற்ப, இதுவரை தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக முதல் நாளிலேயே எலிமினேஷன் நடந்தது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் 24 மணிநேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சாச்சனா முதல் நாளே எலிமினேட் ஆனார். பிக்பாஸ் டம்மி கோப்பையை உடைத்து சாச்சனா வெளியேறினார். அவர் சென்றபின் வழக்கம் போல் கேம்கள் தொடங்கின. அதன்படி இந்த வாரத்துக்கான கேப்டனை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. 8வது சீசனின் தீம், ஆண்கள் vs பெண்கள் தான். எனவே, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே தான் நேற்று கேம்கள் நடந்தன. முதல் கேமில் தர்ஷிகா வெற்றிபெற்று, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் கேப்டன் ஆனார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், இந்த வார நாமினேஷனில் யாரும் தர்ஷிகாவை நாமினேட் செய்ய முடியாது. அதன்படி, இந்த வாரத்துக்கான நாமினேஷனில் தர்ஷிகாவை நாமினேட் செய்யவில்லை. மற்றபடி, ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை நாமினேட் செய்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்ற 6 பேர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி ரவீந்தர், முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித் ஆகிய 6 பேர் தான் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் இந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் பார்த்தால், இந்த இரண்டு நாட்களில் நடிகர் ரஞ்சித், ரவீந்தர் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை வரை இதே நிலை நீடித்தால் நடிகர் ரஞ்சித் அல்லது ரவீந்தர் அடுத்த நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரமே டபுள் எவிக்ஷன் நடைபெறும் சீசன் இதுவே. பல சீசன்களில் முதல் வாரம் எலிமினேஷனே இல்லாமல் இருந்த நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதன்படி இந்த சீசனில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களின் மன நிலையை ஆரம்பத்திலேயே கலைத்து அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி 100 நாட்களுக்கு இதை வைத்து கன்டென்ட் உருவாக்க வேண்டும் என்று பிக்பாஸ் கச்சிதமாக பிளான் போட்டு இருக்கிறார் போல. அதற்கு தான் முதல் 24 மணிநேரத்திலேயே முதல் எலிமினேஷன் நடந்தது. இதில் சாச்சனா சிக்கினார். இப்போது முதல் வார முடிவில் அடுத்த எலிமினேஷன் நடக்கவுள்ளது. அதில் யார் சிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. None
Popular Tags:
Share This Post:
கங்குவா படத்திலிருந்து 2 ஆவது சிங்கிள் வெளியானது… சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்…
October 21, 2024விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!!
October 16, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 10, 2024
-
- October 10, 2024
-
- October 10, 2024
Featured News
Latest From This Week
வேட்டையன் படம் ரிலீஸ் அதுமா இப்படியா... இந்த தீவிர ரசிகர் செய்த செயல் தான் ட்ரெண்டிங்...
ENTERTAINMENT
- by Sarkai Info
- October 10, 2024
Vettaiyan: ரஜினி படத்துக்கு லீவ்.. அண்ணாமலை பட பாணியில் சபதத்தை நிறைவேற்றிய தொழிலதிபர்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- October 9, 2024
ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும் ? நச்சுனு 5 காரணங்கள் இதோ...!!
ENTERTAINMENT
- by Sarkai Info
- October 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.