ENTERTAINMENT

BiggBoss Tamil | அணி மாறுவதில் வெளிவந்த வன்மம்... மீண்டும் பாத்ரூம் பஞ்சாயத்து?

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனின் 3வது நாளில் சில, பல சம்பவங்கள் நடந்தது. நேற்று முன்தினம் போலவே, நேற்றும் ஜாக்குலின் தனியாகவே படுத்துத் தூங்கினார். கேப்டன் தர்ஷிகா, தன்னை யாரும் அடுத்த வாரம் நாமினேட் செய்துவிடக்கூடாது காலை எழுந்தவுடன் அதற்கான பணிகளை தொடங்கினார். யாரெல்லாம் சீக்கிரம் எழுந்தார்களோ, அவர்களிடம் மடை மாற்றும் முயற்சியை கச்சிதமாக செய்துவந்தார் தர்ஷிகா. ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு போட்டியாளர் அவர்கள் சார்பாக விளையாடுவதற்கு பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் தரப்பில் இருந்து அவர்கள் சார்பாக விளையாட ஒரு பெண் போட்டியாளர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார். ஆண்கள் அணி கூடி பேசி முத்துக் குமரனை அனுப்ப முடிவெடுத்தனர். பெண்கள் தரப்பில் இருந்து ஜாக்குலின் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வி.ஜே. விஷால் சொன்னார். அதற்கேற்றாற்போல், ஜாக்குலின் ஆண்கள் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு பேசினார். மேலும், ‘‘எனக்கு தெரிஞ்சு எல்லாரும் என்னை அனுப்ப மாட்டீங்கன்னு தெரியும். உங்களுக்கு நான் அமைதியா பெட்டுல தூங்கணும்.’’ என்று தான் அனுப்பப்பட மாட்டேன் என்கிற தொனியில் ஜாக்குலின் விவரித்தார். முதல் நாள் பெண்கள் அணி எடுத்த முடிவுக்கு, உடன்படாமல், ஜாக்குலின் பெட்டில் படுத்திருந்ததால் இன்றும் அவ்வாறு அவர்கள் செய்வார்கள் என அவர் பேசினார். அப்போது சுனிதா கோபத்துடன், “நீங்க பெட்ல படுங்க இல்ல சோபாவில் படுங்க அது நமக்கு பிரச்சனையே கிடையாது. ஆனால் இந்த டீமுக்கு நீங்க எங்க சார்பா போறது நல்லது கிடையாது” என்று ஓபனாக சொல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாக்குலின் தனியாக அழுது கொண்டே வெளியேறினார். இறுதியாக பவித்ரா ஜனனியை அனுப்புவதாக பெண்கள் அணி முடிவெடுத்தது. ஆனால், முடிவெடுப்பதற்கு முன்னால் அத்தனை சண்டை. ஜாக்குலின் - சுனிதா என ஆரம்பித்த பிரச்சினை, ஜாக்குலின் - பவித்ரா என முடிந்தது. “பவித்ராவை அனுப்பினால் பாவம் பார்ப்பார்கள் என்கிறீர்கள். பாவம் பார்க்கிறார்களோ இல்லையோ, பவித்ரா செல்ல வேண்டாம்” என அவரின் முகத்துக்கு நேராகவே ஜாக்குலின் கூற இருவருக்குக்குள்ளும் சண்டை மூண்டது. இறுதியில் பவித்ரா கோபத்துடன் “என்னப் பத்தி யாரும் பேச வேண்டாம். பாவம் பார்த்து என்னை யாரும் அனுப்ப வேண்டாம்.” என்று கண்ணீருடன் அங்கிருந்து நகர்ந்தார். Also Read | விஜய் நடிக்கும் தளபதி 69 இந்த படத்தின் ரீமேக்கா? - இணையத்தில் கசிந்த தகவல்! சமரசத்துக்கு பின்னரே, பவித்ரா ஆண்கள் அணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இருவரும் அணி மாறிக் கொண்டனர். அணி மாறியதும் பாத்ரூம் பஞ்சாயத்து வந்தது. ஏனென்றால், பெண்கள் அணிக்குச் சென்றுள்ள முத்துக்குமரன் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமைத்தான் பயன்படுத்தவேண்டும். அதேபோல் ஆண்கள் அணிக்குச் சென்றுள்ள பவித்ரா ஜனனி ஆண்கள் பயன்படுத்தும் பாத்ரூமைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படியான நிலையில், பெண்கள் பாத்ரூமிற்குள் சென்ற முத்து, யாராவது இருக்கீங்களா எனக் கேட்டுக் கொண்டே பாத்ரூமைத் திறந்தார். உள்ளே இருந்து குரல் வந்ததும் பாத்ரூமை மூடிவிட்டு வெளியே வந்தார். கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பெண்கள் பாத்ரூமினைத் திறந்து பார்த்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த முறை அதேபோல் எந்த பஞ்சாயத்தும் வந்துவிட கூடாது என ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.