ENTERTAINMENT

Bigg Boss Tamil Season 8 | கேப்டன் போட்ட உத்தரவு... கொந்தளித்த பெண்கள் அணி... பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. கமல் ஹாசன் விலகிய நிலையில் சீசன் 8-ன் புதிய தொகுப்பாளராக ‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ என களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ஆண்கள், பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் களமிறங்கியுள்ளனர். ஆண்கள் Vs பெண்கள், 24 மணி நேரத்திற்குள் முதல் எவிக்ஷன் என எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு முதல் நாளே அதிரடி காட்ட தொடங்கினார் பிக் பாஸ். முதல் வாரத்தில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தரன் வெளியேற்றப்பட்டார். அதன் பின் நடந்த இரண்டாம் வார நாமினேஷனில் ஒட்டுமொத்த ஆண்கள் அணியும் சேர்ந்து நாமினேஷன் குறித்து விவாதித்து சௌந்தர்யாவை நாமினேட் செய்தனர். பாய்ஸ் அணியில் இருந்த 7 ஆண்கள் அனைவருமே சௌந்தர்யாவை நாமினேட் செய்தது பார்வையாளர்கள் பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது. எந்த ஒரு சீசனிலும் நாமினேஷனை கலந்தாலோசிக்க கூடாது என்ற கண்டிஷனை ஸ்ட்ரிக்டாக போட்ட பிக் பாஸ் இந்த சீசனில் அதை அனுமதித்தது ஏன்? இதற்கு பின் ஏதேனும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா? என்று குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ஷாப்பிங் டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு ரூ. 8700 ஷாப்பிங் பட்ஜெட்டாக நிர்ணயிக்க பட்டிருந்த நிலையில் ரூ. 12,000-த்திற்கு ஷாப்பிங் செய்ததால் அவர்கள் எடுத்த இந்த வாரத்திற்கான உணவுப் பொருட்கள் மொத்தமும் கோட்டை விடப்பட்டு ‘நான் கொடுப்பதை தான் உண்ண வேண்டும்..’ என்று பிக் பாஸ் ஒரே போடாக போட்டுவிட்டார். தர்ஷா குப்தாவின் கேம் பிளானை கொண்டாடிய பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின், சாச்சனா இருவரும் தான் இந்த வாரம் முழுவதும் சமைக்க வேண்டும், அதே போல அவர்கள் தான் இந்த வாரம் முழுவதும் பாத்திரங்களையும் கழுவ வேண்டும் என்று கேப்டன் போட்ட உத்தரவால் பெண்கள் அணி முழுவதும் கொந்தளிக்க இது என்ன விதமான ரிவெஞ்ச் என பார்வையாளர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. ஆண்கள் வீட்டுக்குள் அனுமதியில்லாமல் நுழையும் ஜாக்குலினை ஆண்கள் அணி முழுவதும் ரவுண்டு கட்டி கேள்விகள் எழுப்ப, ‘ஆள் இல்லையென்றால் அப்படித்தான் போவேன்’ என்று அவர் கூற.. ‘இது எங்க இடம், ஆண்கள் இடம் ..அனுமதி கேட்காமல் உள்ளே வந்தால் இனி நடக்குறதே வேற..’ என இதுநாள் வரை சேஃப் கேம் மோடில் இருந்த அர்னவ் உச்சகட்ட கோபத்தில் கையை உயர்த்தி பேசி தற்போதுதான் கன்டென்ட்டே கொடுத்த தொடங்கியுள்ளார்.. ஆக மொத்தம்.. இந்த வாரத்தின் தொடக்கம் முதலே ஆண்கள் அணியின் ரகளை கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது.. இன்று வீட்டில் எந்த அளவிற்கு ரகளை கிளம்பியுள்ளது என்பதை இன்றைய எபிசோடில்தான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.