ENTERTAINMENT

ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும் ? நச்சுனு 5 காரணங்கள் இதோ...!!

வேட்டையன் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம்உலகம் முழுவதும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இது ரஜினியின் 170 -வது படமாக உருவாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம்என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் வேட்டையன் படத்தை வரவேற்க ரசிகர்கள் பேனர்கள் வைத்தும்,போஸ்டர்கள் ஒட்டியும் வருகின்றனர். படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகின்றன. இந்த படத்தில்ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.vலைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல்இயக்கத்தில்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது. முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என்பதே மிகுந்த எதிர்பார்பு தான். அடுத்ததாகசூப்பர் ஸ்டாருடன் இணைந்து இத்தனை கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதே ரசிகர்கள்படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஜெய்பீம் என்ற ஒரு வெற்றி படத்தை தந்தவர் இயக்குநர் ஞானவேல். இவர் படம் என்றாலே ஒரு நல்ல மெசேஜ் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிப்பார்புடன் இருக்கின்றனர். இதையும் வாசிக்க : ஆயுத பூஜையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: மதுரை அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!! மேலும்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இவர் எந்த படத்திற்கு இசையமைத்தாளும் அந்த படம் ஹிட் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் சொல்லவா வேண்டும், இசை வேற லெவலாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் இதுவரை வெளியான இரண்டு பாடல்களுமே ஹிட்…. அதிலும் மனசிலாயோ பாடல் வேற லெவல் ஹிட் என்பதால் ரசிகர்கள் இந்த வீடியோ பாடலை திரையில் காண ஆர்வமாக இருக்கின்றனர். குறிப்பாக வேட்டையன் திரைப்படம் ஒரு கமெர்ஷியல் நிறைந்த ஒரு நல்ல மெசேஜ் தரும் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.