ENTERTAINMENT

BiggBoss Tamil | அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் செய்த பிக்பாஸ் - 2ம் நாளில் நடந்த சம்பவம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று நடந்த நாமினேஷனில் அர்னவுக்கு பிக்பாஸ் நோஸ் கட் செய்தார். பிக் பாஸ் மீண்டும் தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் மீண்டும் குஷியாகியுள்ளனர். முதல் நாளே எலிமினேஷன், மீண்டும் நாமினேஷன் என பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பமே அதகளமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் 24 மணிநேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சாச்சனா முதல் நாளே எலிமினேட் ஆனார். சாச்சனா சென்றபின் வழக்கம் போல் கேம்கள் தொடங்கின. அதன்படி இந்த வாரத்துக்கான கேப்டனை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. மியூசிக்கல் சேர் மாதிரியான ஆட்டத்தில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் மோதிக்கொண்டது. ஆட்டத்தில் தோற்றவர்கள், எதிர் தரப்பினர் முன்னேற முடியாத மாதிரி தடுப்புச் சுவர் போல் நிற்க வைத்தனர். தள்ளுமுள்ளுவுடன் நடந்த இந்த ஆட்டத்தில் தர்ஷிகா வெற்றி பெற, பிக் பாஸ் எட்டாவது சீசனின் முதல் வாரத்தின் கேப்டன் ஒரு பெண்ணாக தர்ஷிகா நியமிக்கப்பட்டார். இதன்பின் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் தொடங்கியது. ஒவ்வொருவரும் இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று சொல்ல, அதன்படி, முதல் நாளில் நடந்த விரோதங்கள், கோபங்கள் அடிப்படையில், ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அதன்படி, நடிகை அன்ஷிதாவை, நடிகர் அர்னவ் நாமினேட் செய்தார். நாமினேட் செய்வதற்கான காரணம் குறித்து கேட்டபோது, “அன்ஷிதாவுக்கு வெளியே நிறைய ப்ராஜெக்ட்ஸ் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆகவே அன்ஷிதாவை நாமினேட் செய்கிறேன்” என்று அர்னவ் கூறினார். அர்னவ் நாமினேட் செய்வதாக கூறும்போது அன்ஷிதா சிரித்துக்கொண்டே இருந்தார். ஆனால் அப்போது, “நீங்கள் அன்ஷிதாவை தேர்ந்தெடுத்தது சரி. ஆனால், அவரின் நலம் விரும்பியாக இல்லாமல், பிக் பாஸ் போட்டியாளராக இருந்து அவரை நாமினேட் செய்ய காரணத்தை கூறுங்கள்” என்று நோஸ் கட் செய்தார் பிக் பாஸ். இதன்பின் பேசிய அர்னவ், “இந்த 24 மணிநேரத்தில் எல்லோரும் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால், அன்ஷிதா மட்டும் ஆக்டிவாக இல்லை. யாருடனும் மிங்கிள் ஆகவும் இல்லை. சைலென்ட்டாக இருக்கிறார் என்பதால் அவரை நாமினேட் செய்கிறேன்” என்றார். Also Read | BiggBoss Tamil | சாச்சனாவை தொடர்ந்து அடுத்த எலிமினேஷன்… சிக்கிய 6 பேர்… இவர்தான் அடுத்த டார்கெட்? ஏற்கனவே, அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவருமே ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே இருப்பது வெளியில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் டிவியின் பிரபல தொடரான செல்லம்மா சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் தான் அர்னவ் மற்றும் அன்ஷிதா. அர்னவ் பிரபல சின்னத்திரை நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டார் திவ்யா. இவர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். அர்னவ் குறித்து நடிகை திவ்யா பல பரபரப்பு புகார்களை முன் வைத்தார். ‘கர்ப்பகாலத்தில் கூட அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அன்ஷிதாவுடன் அர்னவ் தொடர்பில் இருப்பதாகவும்’ ஆடியோ ஆதாரத்துடன் பல பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்காக அர்னவ் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். #arnav #anshida cringe overloaded Fun guaranteed 🤦☺️ #BiggBossTamil #biggboss8tamil #BiggBossTamil8 #BiggBossSeason8 pic.twitter.com/6KnO4KD703 இதை தொடர்ந்து அர்னவ், அன்ஷிதா குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளியான நிலையில்தான் தற்போது இந்த ஜோடி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ஒன்றாக களமிறங்கியுள்ளனர். முன்னதாக, பிக்பாஸ் செல்லும் முன், ஒருவரின் கையை பிடித்த ‘எந்த சக்தியாலும் நமது பந்தத்தை அசைக்க முடியாது’ என அன்ஷிதா வெளியிட்ட வலைதள பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவு அர்னவுக்காக தான் அன்ஷிதா வெளியிட்டுள்ளார் என்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் தான் இருவரும் ஒன்றாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதை வைத்து இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ என்று குமுறிவருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.