ENTERTAINMENT

BiggBoss Tamil | 24 மணிநேரத்தில் வெளியேற போட்டியாளர்.. வாயை கொடுத்து சிக்கிய சாச்சனா.. முதல் நாளே வெளியேற காரணம் என்ன?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக பெண் போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் அறிவிப்பின்படி, 24 மணி நேரத்திற்குள் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி இருக்கிறார். கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, பிக்பாஸ் தமிழ் எட்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது. பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓபன் நாமினேஷன் மூலம் முதல் எலிமினேஷன் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில், போட்டியாளர்களில் பலர் ஒருவருக்கு ஒருவர் பழக்கமில்லாத நிலையில், அவர்களின் விளையாட்டை தெரியாமல், எவிக்சனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டனர். இதனால், முதல் நாள் ஷோவை பரபரப்பை எகிறவைக்கிறது. குறிப்பாக, எவிக்சனுக்கு நாமினேஷன் செய்யப்படுவதே நேற்றைய எபிசோடில் ரகளையாக அமைந்தது. ஒவ்வொருவரும் தன்னை நாமினேஷன் செய்ய வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிக நாமினேஷன் செய்யப்பட்டவர் என்ற முறையில், நடிகை சாச்சனா முதல் ஆளாக 24 மணி நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். வெளியேற என்ன காரணம்?: ஏழு சீசன்களாக இல்லாதவாறு இந்த முறை, ஆண்கள் vs பெண்கள் என பிரிக்கப்பட்டது. இந்த பிரிவே, சாச்சனா வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது. இம்முறை பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய கோடு ஒன்று போடப்பட்டு, கோட்டின் ஒரு பக்கத்தில் சகல வசதிகளும் உள்ள அறைகளும், இன்னொரு பக்கத்தில் வசதிகள் குறைவான அறைகளும் இருந்தன. இதில், சொகுசு அறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பெண் போட்டியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆண்களும் அதே அறைகளை வேண்டும் என சொல்ல வாக்குவாதம் ஆரம்பம் ஆனது. பின்னர், பெண்களுக்கு சொகுசு அறைகளை ஒதுக்க வேண்டும் என்றால், ஒரு வாரம் ஆண்கள் யாரையும் பெண்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யக் கூடாது என்ற கண்டிஷனை முன்வைத்தனர். நடிகை தர்ஷனா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் இந்த கண்டிஷனுக்கு உடன்படவில்லை எனக் கூறிய வேளையில், நடிகை சாச்சனா முதல் ஆளாக இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்னார். மேலும், “ஆண்கள் சொன்னது போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்கள் நமக்குள் தான் நாமினேஷன் செய்ய வேண்டியது இருக்கும். அதிலும் இந்த முடிவை எடுத்தது நாம நாலு பேரும் தான். அதனால் நீங்கள் என்னை நாமினேஷன் செய்தால் நான் தாராளமாக வீட்டில் இருந்து போகிறேன்” என்று கூறி வாயை விட்டு மாட்டிக்கொண்டார் சாச்சனா. Also Read | ‘மகாராஜா’ விஜய் சேதுபதியின் மகள் இவ்வளவு பெரிய பொண்ணா… வயது தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! “எனக்கு சினிமா மீதும் ஆர்வம். எனவே சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை எட்ட பிக்பாஸ் ஒரு தளமாக பயன்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ரொம்ப ஜாலியான பெர்சன். அதே ஜாலியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவேன்” என்று கூறி முதல் நாளே பெரிய கனவோடு உள்ளே வந்தவர் சாச்சனா. அந்த ஆர்வத்தோடு வந்தவர், முதல் நாளே தியாக செம்மலாக மாறி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு முதல் நாளே வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் விஜய் சேதுபதி கொடுத்த அனுப்பிய பிக்பாஸ் கோப்பையை உடைத்து போட்டியில் இருந்து வெளியேறினார் அவர். சாச்சனா கோப்பையை உடைத்து வெளியேறும்போது, “இந்த சீசனில் கோப்பையை நழுவ விட்டு விட்டீர்கள். இனி நீங்கள் வெளியே போகலாம்” என்று பிக்பாஸ் சொல்ல அங்கிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் கண்கலங்கினர். அப்போது சாச்சனா எலிமினேஷன் ஆவதை பார்த்து நடிகர் ரஞ்சித் உட்பட பலர் அழுது கொண்டிருக்கிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் எல்லா போட்டியாளர்களை விடவும் வயதில் குறைந்த போட்டியாளர் சாச்சனா. அவர் எதற்காக வந்தார், எதற்காக முதல் போட்டியாளராக வெளியேறினார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். மேலும், பருத்தி முட்டை இதுக்கு குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற ரீதியில் சாச்சனாவை வசைபாடி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.