ENTERTAINMENT

ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்.. கோலிவுட்டில் பரவும் தகவல்…

மகேஷ் பாபு - ராஜமவுலி இயக்குனர் ராஜமவுலி இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மகேஷ் பாபு நடிக்க உள்ளார். சாகசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. பாகுபலியைப் போன்று இந்த திரைப்படம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களாக உருவாக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேன் வேர்ல்டு திரைப்படமாக இந்த படத்தை எடுப்பதற்கு ராஜமவுலி மற்றும் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன் லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் படத்தில் இடம்பெற கூடும் என தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதே போன்று ஹாலிவுட் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனர் ராஜமவுலி தனது அடுத்த படத்தை உலகமே வியக்கும் வகையில் எடுப்பார் என்று தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நடிகர்களை தவிர்த்து மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்களிடமும் பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் படத்திற்கு கூடுதல் நாட்கள் கால் ஷீட் ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் முன்னணி நடிகர்களின் தேர்வு தாமதமாகி வருகிறது. தீபாவளியையொட்டி ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்.. கோலிவுட்டில் பரவும் தகவல்… ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்.. கோலிவுட்டில் பரவும் தகவல்… மகேஷ் பாபு - ராஜமவுலி தீபாவளியையொட்டி ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 24, 2024, 7:15 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் இயக்குனர் ராஜமவுலி இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மகேஷ் பாபு நடிக்க உள்ளார். சாகசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. பாகுபலியைப் போன்று இந்த திரைப்படம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களாக உருவாக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விளம்பரம் பேன் வேர்ல்டு திரைப்படமாக இந்த படத்தை எடுப்பதற்கு ராஜமவுலி மற்றும் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன் லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் படத்தில் இடம்பெற கூடும் என தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதே போன்று ஹாலிவுட் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனர் ராஜமவுலி தனது அடுத்த படத்தை உலகமே வியக்கும் வகையில் எடுப்பார் என்று தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. விளம்பரம் இதையும் படிங்க - பார்வையிலேயே நடித்திருக்கும் சூரி - அன்னா பென்.. எப்படி இருக்கு கொட்டுக்காளி திரைப்படம்? இந்த நடிகர்களை தவிர்த்து மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்களிடமும் பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் படத்திற்கு கூடுதல் நாட்கள் கால் ஷீட் ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் முன்னணி நடிகர்களின் தேர்வு தாமதமாகி வருகிறது. இதையும் படிங்க - போட்டோவில் அம்மாவுடன் இருக்கும் சிறுமி யாருன்னு தெரியுதா..? இந்த பிரபலம் தான் இவர்! விளம்பரம் தீபாவளியையொட்டி ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: mahesh babu , Rajamouli First Published : August 24, 2024, 7:15 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.