ENTERTAINMENT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ”தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை” - இயக்குனர் நெல்சன் மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதனை நெல்சன் மறுத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மொட்டை கிருஷ்ணனும், திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவும் கல்லூரி கால நண்பர்கள் ஆவர். மொட்டை கிருஷ்ணனிடம் செல்போனில் பேசி வந்ததால், அது குறித்து மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மோனிஷாவைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அடையாறில் உள்ள நெல்சனின் வீட்டிற்கு சென்று தனிப்படை காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீஸ் விசாரணையில் இயக்குனர் நெல்சன் மனைவி.. சம்பவத்தின் பின்னணி! இந்த நிலையில் தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்று திரைப்பட இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். வாழ்நாளில் ஒருமுறைகூட காவல்துறை தன்னிடம் பேசியது கிடையாது என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ”தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை” - இயக்குனர் நெல்சன் மறுப்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ”தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை” - இயக்குனர் நெல்சன் மறுப்பு ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக அடையாறில் உள்ள நெல்சனின் வீட்டிற்கு சென்று தனிப்படை காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 8:12 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதனை நெல்சன் மறுத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மொட்டை கிருஷ்ணனும், திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவும் கல்லூரி கால நண்பர்கள் ஆவர். மொட்டை கிருஷ்ணனிடம் செல்போனில் பேசி வந்ததால், அது குறித்து மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விளம்பரம் இந்த நிலையில், மோனிஷாவைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அடையாறில் உள்ள நெல்சனின் வீட்டிற்கு சென்று தனிப்படை காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீஸ் விசாரணையில் இயக்குனர் நெல்சன் மனைவி.. சம்பவத்தின் பின்னணி! இந்த நிலையில் தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்று திரைப்பட இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். வாழ்நாளில் ஒருமுறைகூட காவல்துறை தன்னிடம் பேசியது கிடையாது என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: nelson dilipkumar First Published : August 25, 2024, 8:12 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.