ENTERTAINMENT

தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்..? ரசிகர்கள் இடையே வெடித்த மோதல்!

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷை சிவகார்த்திகேயன் தாக்கிப் பேசியதாகப் பெரும் சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளப் பக்கங்களில் கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகராகப் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷ் நடித்த 3 படத்தில் சிறிய வேடத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்றும் உயர்ந்த ஹீரோ என்ற அந்தஸ்தில் வந்து நிற்கிறது. தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வந்தது நம்மில் பலருக்கும் தெரியும். சினிமாவில் சிவகார்த்திகேயன், அனிருத், வெற்றிமாறன் மற்றும் சிலருக்கு சினிமாவில் நுழையும் முதல் வாய்ப்பை நடிகர் தனுஷ் தான் அமைத்துக் கொடுத்ததாகப் பல பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவது வழக்கம். மேலும் நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனை தனது தம்பி என்றும், பின்னாளில் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பார் என்றும் பல மேடைகளில் அவர் பேசியுள்ளார். இப்படி நெருங்கிய நட்பு இருந்த தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சில ஆண்டுகளாக அந்த நெருக்கம் இல்லை என்றுதான் கூற வேண்டும். இருவருக்கும் இடையே பிரச்சனை காரணமாகப் பேசிக்கொள்வதில்லை என்று பல செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய கவனம் பெற்ற இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ், இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூரி, அன்னாபெண் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. Aaha 👀 pic.twitter.com/rscC0rsCic இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், “நான்தான் அவர்களைக் கண்டுபிடித்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினேன், நான் தான் அவர்களை முன்னேற்றினேன் என்றெல்லாம் நான் ஒருபோதும் யாரையும் நான் சொல்லமாட்டேன். அப்படியே என்னைச் சொல்லிச் சொல்லிப் பழக்கிவிட்டார்கள். என்னுடைய நபரை அறிமுகம் செய்து வைப்பதைப் போலத்தான் செய்கிறேன். நடிகராக இந்த இடத்தில் இருந்து அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இது வெற்றியதானதால் இவ்வாறு செய்வது தொடரும்” என்று கூறினார். See this raa mada koo🔥 pic.twitter.com/EpVSarC2V4 சிவகார்த்திகேயன் மேடையில் பேசியது சர்ச்சையைக் கிளப்பிப் பேசுபொருளாக மாறியுள்ளது. தனுஷைத் தான் அவர் தாக்கிப் பேசியுள்ளார் என்று சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே சோசியல் மீடியாவில் மோதல் வெடித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு எதிராகத் தனுஷ் ரசிகர்கள் அவர் சிவகார்த்திகேயன் குறித்துப் பேசியுள்ள பழைய வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.