ENTERTAINMENT

வசூலை அள்ளும் தங்கலான் திரைப்படம்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் உருக்கமான பதிவு…

தங்கலான் படத்தில் விக்ரம் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தங்கலான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள விக்ரம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி வெளியானது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி, டேனியல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோலார் தங்க வயல் பணியாளர்களை மையமாக வைத்து பீரியட் மூவியாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் வரவேற்பை தங்கலான் திரைப்படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மட்டும் தங்கலான் திரைப்படம் 26 கோடியே 44 லட்ச ரூபாய் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பட குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் நெகிழ்ந்து போன நடிகர் விக்ரம் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். Thank you for the unfathomable love. Couldn’t ask for anything better than this. 💛கோடி நன்றிகள். #thangalaanblockbuster pic.twitter.com/JmD2RYbktL ‘அளவிட முடியாத அன்பை கொடுத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி. இதனை விட சிறப்பான ஒன்றை கேட்க முடியாது. கோடி நன்றிகள்’ என்று விக்ரம் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸை குவித்து வருகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / வசூலை அள்ளும் தங்கலான் திரைப்படம்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் உருக்கமான பதிவு… வசூலை அள்ளும் தங்கலான் திரைப்படம்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் உருக்கமான பதிவு… தங்கலான் படத்தில் விக்ரம் இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 17, 2024, 8:47 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தங்கலான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள விக்ரம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி வெளியானது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி, டேனியல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோலார் தங்க வயல் பணியாளர்களை மையமாக வைத்து பீரியட் மூவியாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் வரவேற்பை தங்கலான் திரைப்படம் பெற்றிருக்கிறது. விளம்பரம் இந்நிலையில் படம் வெளியான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மட்டும் தங்கலான் திரைப்படம் 26 கோடியே 44 லட்ச ரூபாய் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பட குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையும் படிங்க - Thangalaan : தங்கலான் ஆரத்தி ரோலில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு முன் தேர்வான பிரபல நடிகை யார் தெரியுமா? இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் நெகிழ்ந்து போன நடிகர் விக்ரம் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். விளம்பரம் Thank you for the unfathomable love. Couldn’t ask for anything better than this. 💛கோடி நன்றிகள். #thangalaanblockbuster pic.twitter.com/JmD2RYbktL — Vikram (@chiyaan) August 16, 2024 விளம்பரம் ‘அளவிட முடியாத அன்பை கொடுத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி. இதனை விட சிறப்பான ஒன்றை கேட்க முடியாது. கோடி நன்றிகள்’ என்று விக்ரம் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸை குவித்து வருகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vikram First Published : August 17, 2024, 8:47 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.