CHENNAI

சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி

கோப்புப்படம் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்றும், நாளையும் பகல் மற்றும் இரவில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர். தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலையில் 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை 20 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உடனுக்குடன் ரயில்கள் கிடைக்காததால் பயணிகள் தவித்து வருகின்றனர். இதையும் படிக்க : சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! மேலும் இரவு 10.40 மணிக்கு மேல் வழக்கமான மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறு மார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையேயும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இந்த ரயில் வழிதடங்களில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி கோப்புப்படம் இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : July 27, 2024, 7:14 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்றும், நாளையும் பகல் மற்றும் இரவில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர். தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலையில் 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை 20 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உடனுக்குடன் ரயில்கள் கிடைக்காததால் பயணிகள் தவித்து வருகின்றனர். விளம்பரம் இதையும் படிக்க : சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! மேலும் இரவு 10.40 மணிக்கு மேல் வழக்கமான மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறு மார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையேயும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இந்த ரயில் வழிதடங்களில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai local Train , Electric Train First Published : July 27, 2024, 7:14 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.